இறைவன் இல்லாத இடத்தைக் காட்டும்; உமக்குப் பன்னிரண்டு பழங்கள் தருகின்றேன்” என்றாள். எல்லோரும் நாணினார்கள். சிறுமியின் செவ்விய மதி நலத்தைக் கண்டு துதி செய்தார்கள். குறைவற்று:- இறைவன் ஒருவனே குறைவிலா நிறைவு உள்ளவன் எத்துணைப் பெருஞ் சிறப்புடையவர்கள்பாலும் ஏதாவது ஒரு குறையிருக்கும். சேதன அங்கமாய்:- சேதனம்-ஞானம். முருகவேள் அறிவையே வடிவாக உடையவர். “ஞானந்தான் உருவாகிய நாயகன் இயல்பை நானும் நீயுமாய் இசைத்தும் என்றால் அஃது எளிதோ? -கந்தபுராணம். “அறிவுமறி யாமையுங் கடந்த அறிவுதிரு மேனியென் றுணர்ந்துன் அருணசர ணாரவிந்த மேன்று அடைவேனோ” -(குகையில் நவ) திருப்புகழ். பரிசுத்தத்தோர் பெறும் இன்பமாய்:- தூய அன்பர்கள் பெறுகின்ற பேரின்பம் முருகன். “தூயநிலையேகண்ட முத்தரித யாகமல மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக சுயபடிக மாவின்ப பத்மபதமே” -(சுருதிமுடி) திருப்புகழ். முப்பத்தாறினின் முடிவேறாய்:- (தத்துவங்களின் விவரத்தை 196-ஆம் பக்கம் பார்க்கவும்) முப்பத்தாறு தத்துவங்களுங் கடந்தவன் இறைவன். “ஆறாறுமீதில் ஞானோபதேசம் அருள்வாயே” -(மாலாசை) திருப்புகழ். இந்த்ரகோட்டி மயக்கத்தான் மிக மந்த்ர ரூபமெடுத்துத் தாமதமின்றி வாழ்த்திய சொக்கக் காவல்:- கோட்டி-கூட்டம். வடமொழியில் கோஷ்டி யென்பர். முருகனை, இந்திரன் முதலிய தேவ கூட்டங்கள் அன்பின் மிகுதியால் மயக்கத்துடன், மந்திர ரூபமான |