எண்கூடரு ளால்நௌவி நோக்கியை நன்பூமண மேவிசி ராப்பளி யென்பார்மன மேதினி நோக்கிய பெருமாளே. பதவுரை அந்தோ மனமே=ஐயோ! மனமே!, நமது ஆக்கையை நம்பாதே=நாம் வாழ்கின்ற இவ்வுடம்பு நெடுநாளைக்கு நிற்குமென்று நம்பி மோசம் போகாதே, இத அகித சூத்திரம்=இன்பமும் துன்பமும் நிறைந்த ஒரு எந்திரமாகும், இது அம்போருகன் ஆடிய பூட்டி=இவ்வுடம்பு பிரமதேவனால் செய்யப்பட்டது, இனிமேல் நாம்=சென்றது சென்றாலும் இனிமேலாவது நாம், அஞ்சாது அமையா=உடல் விரைவில் அழியுமே என்று பயப்படாமல் இருக்க முடியாது, கிரி யாக்கையை பஞ்சு ஆடிய=கிரௌஞ்ச மலையின் வடிவத்தைத் தூள்படுத்திய, வேலவனார்கு இயல் அங்கு ஆகுவம் வா= வேலாயுதக் கடவுளுக்கு நீங்காத அன்புடையோமாகுவம் அங்கு நீ என்னுடன் வருவாய், இனிது=இதுதான் இன்ப நெறியாகும், ஆக்கையை ஒழியாமல் வந்தோம்= உடம்பை ஒழியாமல் எடுத்துக்கொண்டே வந்தோம், இதுவே கதி ஆட்சியும் இந்தா= முருக வேளுக்கு ஆட்பட்டு அன்பு செய்யும் இம் மெய்ந்நெறியே மோட்சம் ஆன்றோர் வழக்குமாம் ஆதலால் இதனைப் பெற்றுக்கொள், இது மயில்வாகனர் நாம் வந்து ஆளுவம் என வீக்கிய சீட்டு இந்தா=இது மயிலேறும் பெருமான் “நாம் வந்தருளி உன்னை யாட்கொள்வோம்” என்று வேகமுறச் செலுத்தித்தந்த சிட்டு; இதனைப் பெற்றுக்கொள், சிவநீறும் இந்தா=மங்கலத்தை நல்கும் திருநீற்றையும் பெற்றுக் கொள், வந்தே வெகுவாக நமை யாட்கொள்ள=முருகன் அநேகமாக வலிதில் வந்தே நம்மை யாட்கொள்ளுவதற்கு, உவந்தவர்=மகிழ்ந்திருக்கின்றார், மதம் மேதினி மேற்கொள=இந்த மெய்க் கொள்கையை உலகம் மேற்கொள்ளும் பொருட்டும், உய=நீ உய்யும் பொருட்டும், மைந்தா=வலிமையுள்ளவரே! குமரா=குமாரக்கடவுளே! மா துடி= பெரிய உடுக்கையும், செம்பூரிகை=செம்மை பொருந்திய பூரி என்னும் வாத்தியமும், பேரிகை=பேரிகையும், திந்தோதிமி தீதத தந்தாதனனா தன தாத்தன= திந்தோதிமி தீதத தந்தாதனனா தன தாத்தன என்ற தாளபேதங்களுடன், ஆர்த்து எழ=ஆரவாரித்து எழவும், மறை ஓத=வேதங்களை ஓதவும், செம் காடு எனவே வரும், மூர்க்கரை=சிலந்த காட்டைப்போல் எதிர்த்து வந்த இராக்கதர்களை, சங்கார சிகாமணி வேல்கொடு= சங்காரஞ் செய்வதில் முதன்மை பெற்றதாகிய வேலாயுதத்தைக் கொண்டு, செண்டு ஆடி=அவர்களது தலைகளைச் செண்டுபோல் ஆடி, மகா மயில் மேல்கொளு=பெரிய மயில் வாகனத்தின்மீது எழுந்தருளிய, முருகோனே=முருகப் பெருமானே! இந்து=சந்திரனையும், ஓடு=ஆமையின் ஓட்டையும், இதழ்=பூவிதழ்களையும், நாகம்= பாம்புகளையும், மகா கடல்=பெரிய கடல் போலப் பெருகிவந்த கங்கையையும், கங்காளம்=பிரம விட்டுணுக்களுடைய எலும்புக் கூட்டையும், மின் ஆர் சடை சூட்டிய= ஒளி நிறைந்த சடை முடியிலும் (திருமேனியிலும்) அணிந்துகொண்டுள்ள, என்தாதை= |