பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 459

 

சதுர்மறை சந்தத் தொடுபாட................ஆடி:-

வேதங்கள் தாமே ஒலி செய்ய இறைவன் நடம் புரிந்தருளுகின்றார்.

செழுமறையஞ்சொற் பரிபுர:-

முருகப் பெருமான் திருவடியில் அணிந்துள்ள தண்டை சதங்கை முதலிய அணிகலன்கள் வேத மந்திரங்களை உச்சரித்து ஒலிக்கின்றன.

       “மறைசதுர்விதந் தெரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச
          மலரடி”                -(அனைவரு) திருப்புகழ்.

கருத்துரை

திரிசிரகிரித் திருமுருகா! மாதரது உறவை மறந்து உனது திருவடியைத் தொழும் அன்பைத் தந்தருளும்.

100

      பகலவ னொக்குங் களவிய ரத்னம்
                பவளவெண் முத்தந்                           திரமாகப்
           பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம்
                பரிவென வைக்கும்                           பணவாசை
      அகமகிழ் துட்டன் பகிடம ருட்கொண்
                டழியும வத்தன்                                குணவீனன்
           அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்
                டலைதலொ ழித்தென்                      றருள்வாயே
      சகலரு மெச்சும் பரிமள பதமந்
                தருணப தத்திண்                            சுரலோகத்
           தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந்
                தழுவஅ ணைக்குந்                       திருமார்பா
      செகதல மெச்சும் புகழ்வய லிக்குந்
                திகுதிகெ னப்பொங்                      கியவோசை
           திமிலைத் விற்றுந் துமிகள்மு ழக்குஞ்
                சிரகிரி யிற்கும்                               பெருமாளே.

பதவுரை

சகலரும் மெச்சும்=எல்லோரும் புகழும், பரிமள பத்மம்=நறுமணமுள்ள தாமரை போன்ற, தருணபத=இளமைவாய்ந்த திருவடிகளை யுடையவரே! திண் சுரலோக தலைவர் மகட்கும்=வலிமையுடைய தேவலோகத் தலைவரான இந்திர குமாரியான தேவசேனைக்கும், குறவர்மகட்கும்=குறவர் குமாரியான வள்ளியம்மைக்கும், தழுவ அணைக்கும்