பக்கம் எண் :


462 திருப்புகழ் விரிவுரை

 

       “.............அணிமணித் தண்டையார்க்கும்
           செழுமல ரடியுங்கண்டான் அவந்தவம் செப்பற்பாற்றோ” சூரபன்மன் காண்கின்ற காட்சி:-

“தண்டையுஞ் சிலம்பும் ஆர்க்கும் சரணமும் தெரியக் கண்டான்”

முருகப் பெருமானுடைய திருவடியை அகில உலகத்தாரும் புகழ்கின்றார்கள். அதனால் “சகலரு மெச்சும்” என்றார்.

செகதல மெச்சும் புகழ் வயலிக்கும்:-

வயலூர் என்பது அரிய முருக க்ஷேத்திரம். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 5 கல் தொலைவில் நல்ல சூழ்நிலையில் சோலையும் வயலும் சூழ விளங்குகின்றது. அதனால் வயலூரையும் திருச்சிராப்பள்ளியையும் சேர்த்து இத்திருப்புகழில் சுவாமிகள் பாடுகின்றார்.       

வயலிக்கும் சிரகிரியிற்கும்:-

இடப் பொருளில் கண்ணுருபு பெற்று வரவேண்டியது நான்காம் வேற்றுமையாக குவ்வுருபு பெற்று வந்தது. உருவு மயக்கம்.

கருத்துரை

சிரகிரிப் பெருமானே! அலைதலை யொழித்து ஆண்டருள்வீர்.

101

      ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை
                ஒருவரொடு செங்கை                           யுறவாடி
           ஒஎஉவரொரு சிந்தை ஒருவரொடு நிந்தை
                ஒருவரொடி ரண்டு                          முரையாரை
      மருவமிக அன்பு பெருகவுள தென்று
                மனநினையு மிந்த                                மருள்தீர
           வனசமென வண்டு தனதனன வென்று
                மருவுசர ணங்க                                ளருளாயோ
      அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க
                அடலிடுப்ர சண்ட                               மயில்வீரா
           அமரர்முத லன்பர் முனிவர்கள்வ ணங்கி
                அடிதொழுவி ளங்கு                         வயலூரா