பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 489

 

நிர்க்குணன்:-

குணம்-கட்டுவது. பிராகிருத குணமாகிய சத்துவம் ராஜஸம் தாமசம் என்ற முக்குணங்கள் இல்லாதவர், சிவபெருமான்.

ஆதி:-

அப்பரமனே ஆதிப் பொருள்.

“அந்தம்ஆதி என்மனார் புலவர்”          -சிவஞானபோதம்.

செகவித்தன்:-

வித்து-விதை.

இந்த வுலகம் முளைப்பதற்கு விதைப்பொருளாக இருக்கின்றவர் சிவபிரான்.

நிசப்பொருள்:-

அவர் ஒருவரே மெய்ப்பொருள். ஏனைய அனைத்தும் தோன்றி மறையும் பொய்ப் பொருள்களேயாகும்.

ஒப்பிலி:-

“தனக்குவமை யில்லாதான்”                -திருக்குறள்.

       “சமானரஹிதம் விபும்”                 -சுருதி.

இறைவன் ஒப்பிலாத ஒருவன்.

கருத்துரை

திரிசிரபுரம் உறையுந் தேவ தேவா! இயம தண்டனையினின்றும் நீக்கி என்னைக் காத்தருள்வீர்.

106

      பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்
           பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள்
           புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் கொங்கைமேலே
      புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
           மிடிய ராக்குபொ லாமூ தேவிகள்
           புலையர் மாட்டும றாதே கூடிகள்            நெஞ்சமாயம்