பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுககில் சந்து பனிநீர்தோய் புளகித கொங்கை யிளகவ டங்கள் புரளம ருங்கி லுடைசோர இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து இணைதரு பங்க அநுராகத் திரிதலொ ழிந்து மனதுக சிந்து னிணையடி யென்று புகழ்வேனோ மருள்கொடு சென்று பரிவுட னன்று மலையில்வி ளைந்த தினைகாவல் மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே தெருளுறு மன்பவர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதனாளில் தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே. பதவுரை மருள்கொடு சென்று=(வள்ளிபிராட்டிமீது) மோக மயக்கம் கொண்டு சென்று, பரிவுடன் அன்று=அன்புடன் அந்நாளில், மலையில் விளைந்த தினை காவல்=வள்ளி மலையில் விளைந்த தினைப்பயிரைக் காவல் புரிந்த, மயி்லை மணந்த=மயில் போன்ற வள்ளிபிராட்டியை மணந்து கொண்ட, அயிலவ=வேலவரே! எங்கள் வயலியில்வந்த முருகோனே=எங்கள் வயலூரில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே! தெருள் உறும் அன்பர்=தெளிந்த அறிவுடைய அடியார்கள், பரவ விளங்கு=துதி செய்ய விளங்குகின்ற, திரிசிரகுன்றில்=திரிசிரா மலையில், முதல் நாளில்=ஆதி நாள் முதல், தெரிய இருந்த= எல்லோர்க்குந் தெரியுமாறு இருந்த, பெரியவர் தந்த=பெரியவராகிய சிவபெருமான் பெற்ற, சிறியவ=சிறிய பெருந்தகையே! அண்டர் பெருமானே=தேவர்கள் போற்றும் பெருமையில் சிறந்தவரே! பொருள்கவர் சிந்தை=பொருளைக் கவர்வதையே சி்ந்தையில் கொண்ட, அரிவையர் தங்கள்=பொது மாதர்களுடைய, புழுகு அகில் சந்து=புழுகு அகில் சந்தனம், பனிநீர் தோய்=பன்னீர் ஆகிய இந்த வாசனைகள் தோய்ந்த, புளகித கொங்கை இளக=புளகிதங்கொண்ட தனங்கள் நெகிழ்ந்து அசையவும், வடங்கள் புரள= மணிமாலைகள் புரளவும், மருங்கில் உடை சோர=இடையில் ஆடை சோரவும், இருள் வளர் கொண்டை சரிய=இருள் நிறைந்த கரிய கூந்தல் சரியவும், இசைந்த இணைதரு= மனம் ஒத்துச் சேருகின்ற, பங்க அநுராக திரிதல் ஒழிந்து=குற்றத்துக்கு இடமான காம வாழ்க்கையில் திரிகின்ற தம்மை ஒழிந்த, |