பக்கம் எண் :


496 திருப்புகழ் விரிவுரை

 

    “பெரியவன் சிராப்பள்ளிப் பேணுவார்
       அரியயன் தொழ அங்கிருப் பார்களே”                -அப்பர்.

சிறியவர்:-

சிவகுமாரர் நால்வர், விநாயகர், வீரபத்திரர், வைரவர், வேலவர் இந்த நால்வரில் சிறியவர் முருகர்.

கருத்துரை

சிராமலை நாதா! உமது பாதத்தைப் புகழ்ந்து பாட அருள் செய்வீர்.

108

      வாசித்துக் காணொ ணாதது
                பூசித்துக் கூடொ ணாதது
                வாய்விட்டுப் பேசொ ணாதது           நெஞ்சினாலே
           மாசர்க்குத் தோணொ ணாதது
                நேசர்க்குப் பேரொ ணாதது
                மாயைக்குச் சூழொ ணாதது                 விந்துநாத
      ஓசைக்குத் தூர மானது
                மாகத்துக் கீற தானது
                லோகத்துக் காதி யானது                 கண்டுநாயேன்
           யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ்
                ஞானத்தைப் போதி யாயினி
                யூனத்தைப் போடிடாதும                 யங்கலாமோ
      ஆசைப்பட் டேனல் காவல்செய்
                வேடிச்சிக் காக மாமய
                லாகிப்பொற் பாத மேபணி                கந்தவேளே
           ஆலித்துச் சேல்கள் பாய்வய
                லூரத்திற் காளமோடட
                ராரத்தைப் பூண்ம யூரது                      ரங்கவீரா
      நாசிக்குட் ப்ராண வாயுவை
                ரேசித்தெட் டாத யோகிகள்
                நாடிற்றுக் காணொ ணாதென            நின்றநாதா
           நாகத்துச் சாகை போயுயர்
                மேகத்தைச் சேர் சிராமலை
                நாதர்க்குச் சாமி யேசுரர்                      தம்பிரானே.