வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை நெகிழ்ந்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில் விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய மிலரானால் வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள விசித்ர மேற்படு முலையினு நிலையினு மெவரோடும் மருட்டி வேட்கைசொல் மொழியிலும் விழியினு மவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு மதிக்கொணத்தள ரிடையினு நடையினு மவமேயான் மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு தடத்து மோக்ஷம தருளிய பலமலர் மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு மறவேனே இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற இரக்ஷை வாய்த்தருள் முருகப னிருகர குகவீரா இலக்ஷுமீச்சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல் இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி களிகூரத் திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட மயிலேறும் செருப்ப ராக்ரம நிதிசர வணபவ சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு திரிச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு பெருமாளே. பதவுரை இருட்டு இலா=இருள் இல்லாத, சுரர் உலகினில் இலகிய=தேவ லோகத்தில் விளங்கி நிற்கும், சகஸ்ர நேத்திரம் உடையவன்=ஆயிரங் கண்களை உடைய இந்திரனுடைய, மிடி அற=வறுமைத் துயரம் நீங்குமாறு, இரட்சை வாய்த்து அருள்=அவனுக்குப் பாதுகாப்பைத் தந்தருள், முருக=முருகக் கடவுளே! பன் இருகர=பன்னிரண்டு கரங்களையுடையவரே! குக=குகமூர்த்தியே! வீரா=வீரரே! இலட்சுமி ஈச்சுர=இலட்சுமீகரம் விளங்குந் தலைவரே! பசுபதி=சிவபெருமானுக்கு, குருபர=குருமூர்த்தியே! சமஸ்த ராச்சிய ந்ருப=சகல ராஜ்யங்களுக்கும் அரசரே! புகழ் வயம் இயல்=புகழும் வெற்றியும் பொருந்திய, இலக்கர் ஏய்படை முகடு எழு=இலக்கம் வீரர்கள் கூடிய சேனையின் மேலே பறந்துலவும், ககபதி களி கூர=பறவையரசனாகிய கருடன் மகிழ்ச்சி |