பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 515

 

பிணையொத்து:-

பிணை-பெண்மான். பெண் மானைப் போன்ற மருண்ட பார்வையுடைய கண்கள்.

       பிணையோர் மடநோக்கும் நாணும் உடையார்க்கு
       அணிஎவனோ ஏதில தந்து.          -திருக்குறள்.

அலர்பொற் கமலத்தில் மைகண்:-

அலர்ந்த அழகிய தாமரை மலர்போன்ற கண்கள்.

நலமற்றறிவாற் றுணர்வற்றனன்:-

ஆன்ம லாபமாகிய நலத்தையும், நல்லறிவையும் மெய் யுணர்வையும் மாந்தர்கள் மாதர் மயலால் இழந்து விடுகின்றார்கள்.

நற்கதி எப்படி பெற்றிடுவேனோ? :-

“நலமான பரகதியை அடியேன் எவ்வாறு பெற்று உய்வேனோ?” என்று அடிகளார் ஏங்குகின்றார்.

புயலுற்றியல் மைக்கடலிற்புகு கொக்கற:-

கொக்கு-மாமரம். முடிவில் சூரபன்மன் கடலில் மாமரமாக நின்றான்.

      விடம்பிடித் தமலன் செங்கண்
           வெங்கனல் உறுத்திப் பாணி
      இடம்பிடித் திட்ட தீயில்
           தோய்த்துமுன் இயற்றி யன்ன
      உடம்பிடித் தெய்வம் இவ்வாறு
           உருகெழு செலவின் ஏதி
      மடம்பிடித் திட்ட வெஞ்சூர்
           மாமுதல் தடிந்த தன்றே.            -கந்தபுராணம்.

செயசித்திரமுத் தமிழுற்பவநற் செபமுற் பொருளுற்றருள் வாழ்வே:-

திருஞான சம்பந்தரை முருகவேள் அதிட்டித்துச் செய்த திருவருளை இது குறிக்கின்றது.

சிவதைப்பதி:-

இரத்தினகிரிக்குச் சிவாயம் என்று பெயர் உண்டு.

“சடைவிராய விருப்புச் சிவாயமே
 சங்கரற்கு விருப்புச் சிவாயமே”    -வாட்போக்கிக் கலம்பகம்.

“சடைவிராய விருப்புச் சிவாயமே