சிவபிரானுடைய சடையில் கலந்து உச்சியில் உள்ளது கங்கை. வாயம்-நீர். “சங்கரற்கு விருப்புச் சிவாயமே” சிவபிரானுக்கு விருப்பமான தலம் சிவாய மலையாகும். கருத்துரை இரத்தினகிரி மேவிய இளம் பூரணரே! அடியே நற்கதி பெற அருள் புரிவீர். சுற்றகப டோடுபல சூதுவினை யானபல கற்றகள வோடுபழி காரர்கொலை காரர்சலி சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு துயர்மேவித் துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு செத்தையென மூளுமொரு தியில்மெழு கானவுடல் சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு பொறியாலே சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில் தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர் சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை விளையாடித் தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல் தத்திமுடி வாகிவிடுவேனொமுடியாதபத மருள்வாயே தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு எனதாளம் திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் களமீதே எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல மிக்கநரி யாடகழு தாட கொடி யாடசமர் எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு வடிவேலா எத்தியொரு மானதினை காவல்வல பூவைதனை சித்தமலை காமுககு காநமசி வாயனொடு |