பக்கம் எண் :


58 திருப்புகழ் விரிவுரை

 

தமிழினில் உருகிய அடியவர்:-

தமிழ்-இனிமையான மொழி. இனிய தமிழில் இறைவனைத் துதிசெய்தால் உள்ளம் உருகும்.

சனன மரணமதை யொழிவுற:-

பிறப்பிறப்பில்லாத பெருந்தகை முருகன், அப்பெருமான் அடியாரது பிறப்பிறப்பினை யொழித்து அருள்புரிவான்.

சிவமுற:-

சிவத்துடன் இரண்டறக் கலக்கும் அத்துவித முத்தி.

கருணைய விழி பொழி:-

முருகவேளின் கண்கள் கடல்போல் கருணை பொழியும்.

“கருணை பொழி கமல முகமாறும்”
                                        (ஒருவரையு) திருப்புகழ்.

“மறுவறு கடலென மருவுபனிரு விழி
   வழிந்த அருளே பொழிந்து தொருபால்”
                                                 -கொலுவகுப்பு.

கடலுலகினில் வரும் உயிர்படும் அவதிகள் கழியவும்:-

“முருகா! உலகில் உள்ள எல்லாவுயிர்களும் கவலையற்று வாழ வேண்டும்” என்று சுவாமிகள் வேண்டுகின்றார்.

சமரபுரி:-

திருப்போரூர். இத்தலம் திரிபுராதிகளின் தந்தையான தாரகன் என்ற அவுணனுடன் முருகவேள் போர் புரிந்த இடம்.

தினமுமுனது துதிபரவிய அடியவர் மனது குடிபுகும்:-

சதா இறைவனைப் பரவும் உத்தம அடியார்களின் உள்ளக் கோயிலில் அப்பரமபதி வீற்றிருக்கின்றான்.

“நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்”
                                                    -அப்பர்.

“அடியவர் சிந்தை வாரிசு நடுவினும் உறைபவ”
                                         -(கொந்துவார்) திருப்புகழ்.

ஷடுமையில் நடுவுற:-

ஆறக்கரங்களும் அடங்கிய ஆறு கோணமாகிய யந்திரத்தின் இடையில் முருகன் ஒளிமயமாக விளங்குபவன்.

கருத்துரை

திருவேங்கடத்துறையுந் தேவனே! உன் திருவடி பெற அருள்வாய்.