நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக் கச்சிக் கச்சற் ற்றன்மேவி நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய நிரைதரு மருமலர் செருகிடு பரிமள நிறையுறை மதுகர நெடிதாடி நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற் றொப்புக் கொப்புக் குயர் வாகி நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு நிகழ்புழு கொழுகிய
குழன்மேலும் வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட் டுக்குட் செக்கர்ப் ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன் மதசிலை யதுவென மகபதி தனுவென மதிதில தமும்வதி நுதல்மேலும் மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப் பொற்பக் கத்திச் சையனாகி மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத மலரல திலைநிலை யெனமொழி தழியமெய் வழிபட லொழிவனை யருள்வாயே நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத் துட்டக்கட்டத் தசிகாண நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில் நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில் நகைமுக திருவுறை மணிமார்பா நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத் தைக்கைப் பற்றிப் பொருமாய னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த நரகரி யொருதிரு மருகோனே கச்சுத் தச்சிப் பொற்கட் டிட்டுப் பட்டுக் குட்பட் டமுதாலுங் கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு |