பக்கம் எண் :


68 திருப்புகழ் விரிவுரை

 

அயனிவர் பரவிமுன் அறுமுக சரவணபவனேயென்ற நுதின மொழிதர:-

அயன் அரி அரன் என்ற மும்மூர்த்திகளும் முருகனைத் துதிக்கின்றார்கள். மூவர்க்கு முதல்வன் முருகன் என வுணர்க.

“படைத் தளித்தழிக்குந் த்ரிமூர்த்திகள் தம்பிரானே”
                                                   -(கனைத்த) திருப்புகழ்

“மூவர் தேவாதிகள் தம்பிரானே”          -(வாரிமீதேயெழு) திருப்புகழ்

“உலகொரு தாளான மாமனும்
               உமையொரு கூறான தாதையும்
               உரைதரு தேவா சுராதிபர் பெருமாளே”
                                     -(இருகுழைமீதோடி) திருப்புகழ்

மூவருந்தேவரும் முருகப்பெருமானுடைய திருச்சந்நிதியிற் சென்று சூரசங்காரத்தின் பொருட்டு துதிசெய்து வேண்டிக் கொண்டார்கள்.

பரிபுர கமலம தடியிணை யடியவ ருளமதி லுறவருள் முருகேசா:-

தன்னை நினைந்து நினைந்து உருகும் உத்தம அடியார்களுடைய திருவுள்ளத்தில் முருகன் தனது திருவடியை வைத்து அருள் புரிவர்.

“இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்பும் என
   திதயமு மனக்கும் இருபாதச் சரோருகனும்
                                     -வேடிச்சி காவலன்வகுப்பு

பகவதி:-

பகம்-ஆறு. ஆறு குணங்களையுடையவள் பகவதி. அவை இறைவனுடைய அருட் குணங்களாகும்.

முறுவர:-

முறுவரல்-முணுமுணுத்தல். வழிபாட்டில் தாம் முந்துதற்கில்லையே என்று முணுமுணுத்தல்.

“அறுகெடுப்பார் அயனும் அரியும்
                 அன்றிமற் றிந்திரனோ டமர்
நறுமுறு தேவர்கணங்க ளெல்லா
                 னம்மிற் பின்பல்ல தேடுக்க வொட்டோம்”

என்ற திருவாசகத்தால் அறிக.