உளமகிழ:- செல்வர்கள் மனம் மகிழுமாறு அவர்களை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து பேசுவார்கள். ஆசுகவி பாடி:- கவிகள் நான்கு; ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தார கவி. விரைந்து பாடுகின்றது ஆசுகவி எனப்படும். “நாலுகவி த்யாகா” -அநுபூதி. “ஆசுகவி முதலமொழிவன நிபுண மதுப முகரித மவுன முகுள பரிமள நிகில கவிமாலை” -சீர்பாதவகுப்பு உமது புகழ் மேருகிரியளவு மானதெனவுரமுமான மொழிபேசி:- ஒரு காசுங் கொடுக்க மனமில்லாத-அடுத்த வீட்டுக்குந் தெரியாத-பரம உலோபியைப் பார்த்து, “நீர் பெரிய கொடையாளி; கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கையையுடையவர்; அள்ளி வழங்குகின்ற வள்ளல்; பரமதாதா; தங்களின் புகழ் மேருகிரிபோல் உயர்ந்தது; மேருகிரிவரை பரவியுள்ளது” என்று புகழ்ந்து கூறுவார்கள். அதனால் புலவன், அகம் வாடி, முகம் வெளுத்து வருத்தமுற்றுத் தடுமாற்றம் அடைவான். நச்சிநீர் பிறன் கடை நடந்துசெல்ல நாளையும் உச்சிவம் எனும் உரை யுணர்ந்து கேட்ப தன்முனம் |