திருவேலிறைவனேயாம். கலியுகவரதனாங் கந்தக் கடவுளைக் கருதினவர்க்கு கருதிய யாவுங் கைகூடும். குன்றை:- இது குன்றக்குடி எனவும் மயூரகிரி எனவும் பெயர் பெறும். காரைக்குடிக்கு அருகில் உள்ளது. இங்கு சுவாமி ஆறு திருமுகங்களோடு விளங்குகின்ற காட்சி இரும்பு நெஞ்சையும் உருக்கும். கருத்துரை திருமால்மருகரே! அருணலமிக்க முருகவேளே! குன்றக்குடி யமர்ந்த குமரகுருபர! விலைமகளிர் வலைப்படா வண்ணம் ஆண்டருள்வீர். பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப் பருவம தன்கைச் சென்றக் குணமேவிச் சிறுமைபொருந்திப் பெருமைமு டங்கிச் செயலும ழிந்தற் பமதான தெரிவையர்தங்கட் கயலைவி ரும்பிக் சிலசில பங்கப் படலாமோ கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக் கிலுமெதிர் சண்டைக் கெழுசூரன் கிளையுடன்மங்கத் தலைமுடி சிந்திக் கிழிபட துன்றிப் பொருதோனே குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற் பனமனு வுஞ்சொற் குருநாதா குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக் குடிவளர் கந்தப் பெருமாளே. பதவுரை கெறுவித-கர்வமும், வஞ்சம்-வஞ்சனையும், கபட மொடு-சூதும் கொண்டு, எண்திக்கிலும்-எட்டுத் திசைகளிலும், எதிர் சண்டைக்கு எழு-எதிர்த்து சண்டைக்கு என்று எழுந்த, சூரன்-சூரபன்மன், கிளை உடன் மங்க- சுற்றத்தாருடன் மங்கி அழியுமாறு, தலை முடி சிந்த-அவர்களின் தலைமுடிகள் சிதறவும், கிழிபட-அவர்களின் உடல் கிழிப்பட்டு |