பக்கம் எண் :


112 திருப்புகழ் விரிவுரை

 

விரிவுரை

இத்திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது. ஆன்மாவாகிய தலைவி முருகனாகிய தலைவனை நினைந்து நினைந்து அப்பரமனைத் தழுவப் பெறாமையால் வருந்துகின்ற வருத்தத்தைக் கூறுகின்றது.

தவள மதிய மெறிக்குந் தணலாலே:-

தவளம்-வெண்மை. காமுகர்க்குச் சந்திரன் வெண்ணெருப்பாகக் கொளுத்தி வேதனை தருவான்.

சரசமதனன் விடுக்குங் கணையாலே:-

சரச லீலையைச்செய்யும் மன்மதன் சமயம் பார்த்துப் பூங்கணைபொழிந்து புண்படுத்துவான்.

கவன மிகவு முரைக்குங் குயிலாலே:-

கவனம் - கலக்கம். பிரிவுத்துயரைக் குயில் கூவி மிகுதிப்படுத்தும்.

“மெள்ளவரு சோலைக் குயிலாலே
   மெய்யுருகு மானைத் தழுவாயே”      -(துள்ளுமத) திருப்புகழ்.

கருதி மிகவு மயக்கம் படலாமோ:-

“முருகா! உன்னையே கருதி பெண்ணாகிய நான் மயக்கப்பட்டுத் துன்புறுவது முறையாகுமோ? விரைவில் என்னைத் தழுவி என் வேதனையை நீக்கியருள்”.

பவளநகரு மிதழ்ப் பைங்குறமாது:-

வள்ளியம்மை பச்சைநிறம். இதழ் பவள நிறம். நிறம் மாறுபட்டால் அழகு மிகுதியடையும். “பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்” என்று ஆழ்வாருங் கூறுகின்றார்.

மயிலின்மலை:-

குன்றக்குடிக்கு மாயூரகிரி என்ற மற்றொரு பேருமுண்டு.

விரிவுரை

குன்றக்குடி குமரா! தலைவியாகிய என்னைத் தழுவியாட்கொள்வீர்.

140

நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
நாடோறு மதிகாயும்   வெயிலாலும்
நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
நாடாசை தருமோக   வலையூடே