பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 119

 

ஒன்றுபட்டிருப்பது, தான் லட்சுமியும் தனலட்சுமியும் ஒன்றுபட்டு காட்சியளிப்பது போல் திகழ்கின்றது.

கருத்துரை

திருச்செங்கோட்டு வேலவரே! அறியாமையால் அலையாவண்ணம் ஆண்டருள்வீர்.

142

பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
பைந்தார் புனைந்த    குழல்மீதே
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கே ருகங்கொள்      முகமீதே
மந்தார மள்றல்சந்தார மொன்றி
வன்பாத கஞ்செய்    தனமீதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற      னருள்தாராய்
கந்தா அரன்றன்மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன்      மருகோனே
கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை      மணவாளா
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோள் நிரம்ப     அணிவோனே
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோட மர்ந்த     பெருமாளே.

பதவுரை

கந்தா-கந்தவேளே! அரன் தன் மைந்தா-சிவபெருமானுடைய திருப்புதல்வரே! விளங்கு-விளங்குகின்றவரும், கன்றா-கோபிக்காதவருமாகிய, முகுந்தன் மருகோனே-முகுந்தனுடைய மருகரே! கன்றா, கோபித்து, விலங்கல் ஒன்று ஆறு கண்ட-மலை ஒன்றை வழிதிறக்கச் செய்த, கண்டா-வீரரே! அரம்பை மணவாளா-தேவமாதாவாகிய தெய்வயானைக்கு நாயகரே! செம்தாது அடர்ந்த-செவ்விய பூந்தாது நிரம்பிய, கொந்து ஆர்-பூங்கொத்துக்கள் நிறைந்துள்ள, கடம்பு-கடப்பமலர் மாலையை, திண் தோள் நிரம்ப அணிவோனே-வலிய தோளின் மீது நிரம்பவுந் தரித்துக் கொள்பவரே! திண் கோடாரங்கள்-வலிமையுடைய குரங்குகள், எண்கோடு உறங்கும்-கரடிகளுடன் தூங்குகின்ற, செங்கோடு அமர்ந்த-திருச்செங்கோட்டில் எழுந்தருளி