பக்கம் எண் :


120 திருப்புகழ் விரிவுரை

 

யுள்ள, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! பந்து ஆடி-பந்து விளையாடி, அம் கைநொந்தார்-அழகிய கை நொந்துள்ள மாதர்கள், பரிந்து-ஆசையுடன், பை தார் புனைந்த-பசுமை வாய்ந்த பூமாலை தரித்துள்ள, குழல் மீதே-கூந்தல் மேலும், பண்பு ஆர் கரும்பு-அழகு நிறைந்த வண்டுகள், பண்பாடுகின்ற- இசைபாடுகின்ற, பங்கேருகங்கொள்-தாமரை போன்ற, முகமீதே-முகத்தின்மீது, மந்தார மன்றல்-மந்தார மலரின் வாசனையும், சந்து-சந்தனமும், ஆரம்-முத்து மாலையும், ஒன்றி-சேர்ந்து வன் பாதகம் செய்-கொடிய பாதகங்களைச் செய்யத்தூண்டுகின்ற, தனமீதே-கொங்கைகளின்மீதும், மண்டு ஆசை கொண்டு- நிறைந்த ஆசையைக் கொண்டு, விண்டு ஆவி நைந்து-ஆவி பிரிவது போன்ற துன்பத்தை யடைந்து, மங்காமல் உன்றன் அருள்தாராய்-அடியேன் அழிந்து போகா வண்ணம் உமது திருவருளைத் தந்தருளுவீர்.

பொழிப்புரை

கந்தவேளே! சிவகுமாரரே! கோபிக்காமல் விளங்குகின்ற முகுந்தனுடைய திருமருகரே! கோபித்து கிரவுஞ்ச மலையைப் பிளந்து வழிகண்ட வீரமூர்த்தியே! தெய்வயானையின் கணவரே! சிவந்த பூந்தாதுகள் நிரம்பிய கடம்ப மலர்க் கொத்துக்களால் ஆகிய மாலையை வலிமையுடைய தேளில் தரித்தவரே! வலிய குரங்குகள் கரடிகளுடன் தூங்குகின்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே! பந்து விளையாடி அழகிய கரங்கள் நொந்த மாதர்கள் விரும்பி புதிய பூமாலையை யணிந்த கூந்தலின் மீதும், அழகிய வண்டுகள் இசைபாடுகின்ற தாமரை மலர்போன்ற முகத்தின் மீதும், மந்தார மலரின் வாசனை, சந்தனம், முத்துமாலை, இவை பொருந்தி, கொடிய பாதங்களைச் செய்ய இடந்தரும் தனங்களின் மீதும், மிகுந்த ஆசைகொண்டு ஆவி பிரிவது போல் நொந்து அடியேன் மங்காமல் உமது திருவருளைத் தந்தருள்வீராக.

விரிவுரை

பந்தாடி யங்கை நொந்தார்:-

பெண்கள்பந்தாடிக் களைத்துப் போவார்கள். பந்தாட்டம் பெண்களுக்கே உரியது.

“பந்தாடுமங்கையர் செய்கயல்பார்வையில்” -கந்தரலங்காரம்(79)

பகைவர் இங்கு வந்தால் பெண்களைப் போல் பந்து ஆடவேண்டும் என்று குறிக்கும் பொருட்டு மதுரை கோபுரவாயிலில் பந்தையும் பாவையையும் தொங்க விட்டிருக்கின்றார்கள்.

“வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
   பொருநர்த் தேய்த்த போர்அருவாயில்”
                                       - திருமுருகாற்றுப்படை