பக்கம் எண் :


122 திருப்புகழ் விரிவுரை

 

பதவுரை

பண்டு ஆழி சங்கு கொண்டு-பழமையான சக்கரமும் சங்கும் கொண்டு,ஆழி தங்கும்-கடலில் தங்கியுள்ள, பண்போன் உகந்த-பண்புடைய திருமால் மகிழ்ந்த, மருகோனே-திருமருகரே! பண் சார-இசை பொருத்தவும், நைந்து-உள்ளம் உருகவும், நண்பு ஓதும் அன்பர்-துதிகளை ஓதுகின்ற, அடியார்களின், பங்கு ஆகி நின்ற-பக்கத்தில் துணையாகிநின்ற, குமர ஈசா-குமாரக் கடவுளே! செண்டு ஆடி-அசுரர்களைச் சிதற அடித்து, அண்டர் கொண்டாட-தேவர்கள் புகழும்படி, மனதில் நின்று ஆடி-சபையில் நின்று ஆடுகின்ற, சிவபிரான், சிந்தை மகிழ் வாழ்வே-திருவுள்ளத்தில் மகிழ்கின்ற செல்வமே! செம்சாலி மிஞ்சி-செந்நெல் அமர்ந்த - திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! வண்டார்-வண்டுகள், மதனங்கள் உண்டே-தேனை யுண்டு, மயங்கி வந்து ஊரு-மயக்கத்துடன் வந்து மொய்க்கின்ற, கொண்டல் அதனோடும்-மேகம் போன்ற கூந்தலுடன், வண் காமன் அம்பு தன் கால் மடங்க-வளப்பம் பொருந்திய மன்மதனுடைய மலர்ப் பாணத்தின் செவ்வி குறைய, வன்போர் மலைந்த விழி வேலும்-வலிய போரை எதிர்த்த கண் என்ற வேற்படையையும், கொண்டே வளைந்து- கொண்டுவளைந்து, கண்டார் தியங்க நின்றார்-பார்த்தவர்கள் அப்படியே தியங்கும்படி நின்றவர்களாம் பொது மாதர்களின், குரும்பை முலை மேவி- தென்னங் குரும்பை போன்ற தனத்தின்மீது விருப்பம் வைத்து, கொந்து ஆர் அரும்பும்-பூங்கொத்துக்கள் நிரம்பித் தோன்றும், நின்தாள் மறந்து-உமது திருவடியை மறந்து, குன்றாமல்-அடியேன் அழியாவண்ணம், உன்றன் அருள் தாராய்-உமது திருவருளை தந்தருளுவீராக.

பொழிப்புரை

பழையான சக்கரமும் சங்கும் ஏந்தி, கடலில் தங்கியுள்ள பண்புடைய திருமால் மகிழ்ந்த திருமருகரே! இசை பொருந்தவும், உள்ளம் உருகவும் துதிக்கின்ற அனபர்களின் அருகில் நிற்கின்ற குமாரக் கடவுளே! அரக்கர்களைச் சிதற அடித்துத் தேவர்கள் கொண்டாடும்படி சபையில் நின்று நடிக்கின்ற சிவபெருமான் திருவுள்ளத்தில் மகிழ்கின்ற செல்வமே! செந்நெல் மிகுந்த, மேகங்கள் உலாவுகின்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள, பெருமிதம் உடையவரே! வண்டுகள் தேனையுண்டு மயங்கி வந்து மொய்க்கின்ற மேகம் போன்ற கூந்தலையும், வளப்பமுள்ள மன்மதனுடைய மலர்க் கணையின் செவ்வி குறைய வலிய போர் புரிந்த கண்களாகிய வேலையுங் கொண்ட கண்டவர் தியங்குமாறு வளைந்து நிற்கின்ற பொது மாதரின் குரும்பை போன்ற தனத்தை