பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 123

 

விரும்பி, பூங்கொத்துக்கள் நிறைந்த உமது திருவடியை மறந்து அடியேன் அழியாதபடி உமது திருவருளைத் தந்தருளுவீராக.

வண்டார்:-

வண்டுகள்.அஃறிணையை உயர் திணையாக்க கூறினார். திணைவழுவமைதி. (நன்னூல் 379)

“விரகின்மை கொண்டகுருகார்”                 - கந்தபுராணம்

மதங்கள்:-

மதம்-தேன் ‘மதங் கமழ் கோதை” (சிந்தாமணி)

கொண்டால்:-

கொண்டல்-மேகம். உவம ஆகுபெயராகக் கூந்தலைக் குறிக்கின்றது.

கால்மடங்க:-

கால்-செவவி.

பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு பண்போன்:-

பண்டு-பழமை.சக்கரமும் சங்கும் தாங்கி ஆழியில் துயின்ற திருமால்.

பண்சார நைந்து நண்போது மன்பர் பங்காகி நின்ற குமரேசா:-

பண்-இராகம். நல்ல இசையுடன்பாடி உள்ளம் உருகும் அன்பர்களின் அருகில் நின்று முருகன் கருணை புரிகின்றான்.

செஞ்சாலிமிஞ்சி:-

அருணகிரியார்திருச்செங்கோட்டைப் பாடுகின்ற போது பல இடங்களில் செந்நெல் விளையுந் திருத்தலம் என்றே குறிப்பிடுகின்றார்.

“செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு”
                                        -(அன்பாகவந்து) திருப்புகழ்.

“செகதல மிடிகெட விளைவன வயலணி செங்கோடு”
                                        -(கரையறவுருகு) திருப்புகழ்.

கருத்துரை

திருச்செங்கோட்டுத் தெய்வமே! உமது திருவடியை மறவாத வரம் தந்தருள்வீர்.

144

கரையற வுருகுதல் தருகயல் விழியினர்
கண்டான செஞ்சொல் மடமாதர்