பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 133

 
147

துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்
கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக்
கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத்      திரிமானார்
தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்
தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத்
துன்பவாழ்க்கைத் தொழிற்பண்டாட்டத்    துழலாதே
கஞ்சம் வாய்த்திட்ட வர்க்குங் கூட்டிக்
கன்று மேய்த்திட்ட வாக்குங் கூற்றைக்
கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக்       கிடையாநீ
கண்டு வேட்டுப் பொருட்கொண்டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப்            பெறுவேனோ
வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்
துன்று சூர்ப்பொட்டெழச்சென் றோட்டிப்
பண்டுவாட்குட்களிக்குந் தோட்கொத்       துடையோனே
வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்
தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித்
தொண்டர்கூட்டத்திருக்குந் தோற்றத்        திளையோனே
கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்
குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக்
கொண்டுவேட்டுப் புனப்பைங் காட்டிற்      புணர்வோனே
கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்
கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக்
கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டுப்       பெருமாளே.

பதவுரை

வஞ்சம் ஆய் புக்கு ஒளிக்கும்-வஞ்சகமாகப் புகுந்து ஒளிக்கும், சூல்கை- சூலம் ஏந்திய கையையுடைய, துன்று சூர்பொட்டு எழ-நெருங்கிய சூரபன்மன் அழியும்படி, சென்று ஓட்டி-போர்க்களஞ் சென்று அவனை ஓட வைத்து, பண்டு வாட்கு உள் களிக்கும்-முன்னாள் வாளாயுதத்துள் செலுத்தி மகிழும், தோள் கொத்து உடையோனே-கொத்தாக தோள்களையுடையவரே! வண்டு பாட்டு உற்று இசைக்கும்-வண்டு பொருந்திய பாடல் பாடும், தோட்ட-தோட்டத்தில்