உள்ள, தண் குரா பொற்பு உர-குளிர்ந்தகுராமலர் அணிந்த அழகிய திருமார்பை யுடையவரே! கும்பு ஏற்றி தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து இளையோனே-கும்பு கூட்டி அடியார் கூட்டத்தில் இருந்து காட்சியளிக்கும் இளம் பூரணரே! கொஞ்சு வார்த்தை கிளி-கொஞ்சும் சொற்களையுடைய கிளி போன்றவரும், தண் சேல்கண்-குளிர்ந்த சேல் மீன் போன்ற கண்களை யுடையவரும், குன்ற வேட்டிச்சியை-மலையில் வாழும் வள்ளி நாயகியாரை, கண் காட்டி கொண்டு-கண்காட்டி அழைத்துபோய், வேட்டுபுன பைகாட்டில்- புணர்வோனே-அவரை விரும்பி தினைப்புனத்துக்கு அடுத்த பசுங்காவில் அணைந்தவரே! கொங்கு உலாதி-வாசனையை வீசி உலவச்செய்து, தழைக்கும் கா-தழைத்துள்ள சோலைகளில், பொன் கொண்டல் ஆர்த்து சிறக்கும், காட்சி அழகிய மேகங்கள் நிறைந்து சிறக்குங் காட்சியைக் கொண்ட, கொங்கு நாட்டு- கொங்கு நாட்டில் உள்ள, திருச்செங்கோட்டு-திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! துஞ்சு கோட்டி சுழல் கண்காட்டி-சோர்வு உற்றதுபோல், கண்களைச் சுழற்றிக்காட்டி, கொங்கை நோக்க பலர்க்கும் காட்டி-தனங்கள் தெரியும்படி பலருக்கும் காட்டி, கொண்டு அணாப்பி-அழைத்துக் கொண்டு போய் ஏமாற்றி, துலக்கம் சீர்த்து-தங்கள் பெருமை விளங்க, திரிமனார்-திரிகின்ற மாதர்களின், தொண்டை வாய்- கொவ்வைக் கனி போன்ற வாயிதழின், பொன் கருப்பம்சாற்றை தந்து-அழகிய கருப்பஞ் சாற்றினைப் போன்ற இனிமையைத் தந்து, சேர்த்து கலக்கும் தூர்த்த- அணைத்துச் சேரும் கொடிய, துன்ப வாழ்க்கை தொழில்-துன்ப வாழ்க்கைத் தொழிலாகிய, பண்டு ஆட்டத்து உழலாதே-பழைய ஆட்டங்களில் சுழன்று திரியாமல், கஞ்சம் வாய்த்திட்டவர்க்கும்-மேய்த்திட்டவர்க்கும், ஒன்று சேரச்செய்து கன்றுகளை மேய்யத்த திருமாலுக்கும், கூற்றை கன்ற மாய்த்திட்டவர்க்கும்- இயமன் வாட்டமுற்று மாயும் படிச்செய்த சிவமூர்த்திக்கும், தோற்ற கிடைய நீ-காண்பதற்கு அரியவராகத் திகழும் தேவரீர், கண்டு-அடியேனைப் பார்த்து, வேட்டு-என்மீது பொருள் அமைந்த, இன்ப வாக்யத்து-இன்ப உபதேச வாக்கியத்தை, எனக்கும் கேட்க-அடியேனும் கேட்குமாறு, தந்து காத்து-உபதேசித்துக் காத்தருளி, திருக்கண் சாத்த பெறுவோனே-உமது திருக்கண்ணோக்கம் படுமாறு அருளும் பெரும் பேற்றினை அடியேன் பெறுவேனோ? பொழிப்புரை வஞ்சனையாய் கடலிற் சென்று ஒளித்த-சூலத்தையேந்திய சூரபன்மனை ஓடச்செய்து, அவனை வேலினால், அழியும்படிச் செய்து மகிழும் பன்னிரு தோள்களையுடையவரே! வண்டுகள் |