பக்கம் எண் :


144 திருப்புகழ் விரிவுரை

 

சோதி முருகா எனுங்காதல் கொடு தானிருந்தோத:-

“சோதி முருகா!” “சோதி முருகா!” என்று காதலுடன் தனிமையிலிருந்து ஓதுதல் வேண்டும்.

“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
   ஓதுவார்”              - தேவராம்.

இருவோரகம் பேறு:-

இரு-பெரிய-பெருமை. ஓர்-ஒப்பற்ற, அகம்-உள்ளம். பெருமை தங்கிய ஒப்பற்ற உள்ளத்தில் பேறு பெறும் ஞானத்தைத் தந்தருள்.

கவுரி:-

கவுரம்-பொன்னிறம்.

தூளணைந்தாள்:-

தூள் - விபூதி.

கழைகொள் தோளி:-

கழை-மூங்கில். மூங்கில் போன்ற உருண்ட தோள்களை யுடையவள்.

“வேயுறு தோளிபங்கன்”                                     - தேவாரம்.

பரமதேசிகந்தா:-

பரம தேசிக அந்தா, பரமனுக்குக் குருவே! அழகனே!

தோதகம் பாட:-

தோதகம்-வல்லமை. முருகனுடைய வல்லமையைப் பாடித்துதித்தார்கள்.

வேலெறிந்தே நடனமும் கொள்வோர்:-

வேலால்சூரனைச் சங்கரித்தவுடன் முருகவேள் துடிக்கூத்து ஆடியருளினார்.

“மாக்கடல் நடுவண் சூர்த்திறங்க கடந்தோன்
   ஆடிய துடியும்”                     - சிலப்பதிகாரம்

மாலியன்:-

மாலியவான்.. இவன் இராவணனுடைய சிறிய பாட்டன். தலைமை அமைச்சனுமாக இருந்து அறிவுரைப் பகர்ந்தான்.

“மதிநெறி யறிவு சான்ற மாலியவான்”     - கம்பராமாயணம்.

காணமுடியோன்:-

காணம்-பொன்.

“காண மொன்றில்லைஸ                   - தேவாரம்.

மறைகுலாவு செங்கோடை நகர்:-

திருச்செங்கோட்டில் எப்போதும் வேத முழக்கம் முழங்குகின்றது.