செழுமறை தேர்தென்றலையம் புசகபூதா. - கந்தரந்தாதி (82) கருத்துரை திருச்செங்கோட்டு முருகா! ஞானத்தைத் தந்தருள்வீர் பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத் தும்ப றுத்திட் டின்று நிற்கப் புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் கறியாமே பொங்கி முக்கிச் சங்கை பற்றிச் சிங்கி யொத்தக் கஞ்ச சங்கடத்துப் புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் கொடியார்மேல் துன்று மிச்சைப்பண்டனுக்குப் பண்ப ளித்துச் சம்ப்ர சச்செய்ப் தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் பதிமீதே தொண்டு பட்டுத் தொண்ட னிட்டுக் கண்டு பற்றத் தண்டை வர்க்கத் துங்க ரத்தப் பங்க யத்தைத் தருவாயே குன்றெ டுத்துப்பந்த டித்துக் கண்சி வத்துச் சங்க ரித்துக் கொண்ட லொத்திட் டிந்த்ரனுக்கிச் சுரலோகா கொம்பு குத்திச் சம்ப ழுத்தித் திண்ட லத்திற் றண்டு வெற்பைக் கொண்ட முக்கிச் சண்டையிட்டுப் பொரும்வேழம் சென்று ரித்துச்சுந்த ரிக்கச் சந்த விர்த்துக் கண்சு கித்துச் சிந்தை யுட்பற் றின்றி நித்தக் களிகூருஞ் செண்ப கத்துச்சம்பு வுக்குத் தொம்ப தத்துப்பண்பு ரைத்துச் செங்கு வட்டிற் றங்கு சொக்கப் பெருமாளே. பதவுரை குன்று எடுத்து-கிரவுஞ்சமலையை எடுத்து, பந்து அடித்து-பந்தடிப்பது போல் வேலால் எடுத்து எறிந்து, கண்சிவந்து-கண்கள் சிவந்து, சங்கரித்து-அதனை அழித்து, கொண்டல் ஒத்திட்டு-மேகத்தை யொத்துக் |