அடியார்கள் தியானிக்கும் பொருள் முருகன். யாவோ நாகா:- பாவங்களை நாசஞ் செய்பவன். பாசத்தபராத:- ஆசாபாசமுள்ளவர்களைத் தண்டிக்கும் இடம் நரகலோகம். யாபா யாமாதே சாரூடா:- யாமம்-தென்திசை. தென்திசையில் உள்ள யமபுரியோர். எனதாவி யாமா:- என் ஆவி யமனுடைய நகரஞ் சேர்வது ஆமா? அது நல்லதன்று. காவாய்- காத்தருள். தீயேனீர்வாயாதே:- தீயேன் நீர் வாயாதே. நீர்-நீர்மைக் குணம். நற்குணம். “பெருக்கு நீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே” - தேவாரம். ஈமத்துகலாமோ:- சுடலையில் சென்று அழியலாமோ? காமா:- காமம்-அன்பு. அன்பனே! காமாதீனா:- காம ஆதீனா. அன்பர்கள் விரும்பியவற்றை விரும்பியவாறு வழங்குவதில் சுதந்தரமுடையவர் முருகவேள். நீணாகாவாய் காளக்கிரியாய்:- நீள் நாவாய் காளக்கிரி-நீண்ட பாம்புருவம் வாய்ந்த சர்ப்பகிரி. கங்காளா லீலா பாலா:- கங்காளம்-எலும்புக்கூடு. சர்வசங்கார காலத்து மாலயனாதி வானவரை எரித்து அவரது கங்காளத்தை சிவமூர்த்தியணிந்து கொள்வார், அதனால் அவர் கங்காளர் எனப்பேர் பெற்றார். “கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை” - திருமந்திரம். காமாமோதக் கணமானின்:- காமம்-விருப்பம், ஆமோதம்-மகிழ்ச்சி. கனம்-பெருமை. மான்-வள்ளி. தேமார் தேமா காமீ:- தேம்-தேன். ஆர்-நிறைந்த. தே-இனிமை. மா-தினைமா. காமீ- விருப்பமுள்ளவர். |