தேன் கலந்த இனிய தினைமாவில் முருகர் விருப்பமுள்ளவர். கருத்துரை நாககிரி நாயகா! அவமேயழியாது ஆண்டருள்வீர். அத்து கிரினலத ரத்து அலனவள கத்து வளர்செய்புள கிதபூத ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி யத்தி யிடனுறையு நெடுமாம ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத லத்து ரகசி கரி பதராதே யத்தி மலவுடல்ந டத்தி யெரி கொணிரை யத்தி னிடையடிமை விழலாமோ தத்து கவனவரி ணத்து வுபநிடவி தத்து முனியுதவு மொழியாறுத் தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர் தத்தை தழுவியப னிருதோளா தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர் தத்து மலையவுணர் குலநாகந் தத்து மிசைமரக தத்த மனியமயில் தத்த விடுமமரர் பெருமாளே. பதவுரை தத்து கவன அரிணத்து-வேக நடையுடைய மானினிடத்தில், உபநிடவிதத்து முநி உதவு-உபநிடத விதங்களையுணர்ந்த சிவமுனிவர் தந்த, மொழியால்- சொல்லால், துத்தத்தை-பாலை, நறவை-தேனை, அமுதத்தை நிகர்- அமுதத்தையும் ஒத்த, குறவர் தத்தை தழுவிய-குறவன் குலத்தில் வளர்ந்த கிளிபோன்ற வள்ளியம்மை தழுவிய, பன் இருதோளா-பன்னிரண்டு தோள்களையுடையவரே! தத்து உததி, அலைவீசும் கடல் போல, துரகதத்து மிகுதிதிசர்-குதிரைப்படை மிகுந்த அசுரர்களும், தத்து மலையவுணர்-தகவுகின்ற மலைபோன்ற அவுணர்களும் ஆகிய, குலு நாகம் தத்த-சர்ப்பக் கூட்டம் நடுங்கி ஒடுங்க, மிசை-அவர்கள் மீது, மரகத தமனிய மயில்-மரகத நிறமும் பசும்பொன் நிறமும் படைத்த மயில் மீது ஆரோகணித்து, தத்த விடும்-தாவி விடுத்துக் கொண்டு வந்த, அமரர் பெருமாளே-தேவர்கள் போற்றும் பெருமையிற் சிறந்தவரே! அது கிரியின் நல் அதரத்து-அந்தப் பவளம் போன்ற நல்ல உதட்டிலும், அல் அன அள |