பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 169

 

அலனவள கத்து:-

அல் அன அளகத்து. அல்-இருள். அன-அன்ன. இருள்போன்ற கரிய கூந்தல்.

வளர்செய் புளகித பூதரத்து:-

பூதரம்-மலை. ஆகுபெயராக-தனத்தைக் குறிக்கின்றது.

இதயம்உருகி:-

மாதர்களின்அவயவ நலத்தினால் மனம் உருகி நல்வழி விடுத்து அல்வழி யடுத்து அழிவர் பலர்.

அத்தி யிடனுறைவு நெடு மாமரத்து:-

அத்தி-கடல். சூரபன்மன் கடைசி நேரத்தில் கடலில் இரும்பு மா மரமாக முளைத்து உலகை நடுக்கினான்.

உரகசிகரி:-

உரகம் - பாம்பு. உரகசிகரி-நாககிரி. இம் மலையைப் பரவினோர் நரகிடைப் புகுதார்.

அத்தி மலவுடல் நடத்தி:-

அத்தி-எலும்பு.எலும்பும் மலமும் பொருந்திய இந்த வுடம்பைச் சுமந்து பாவம் புரிவர்.

எரிகொள் நிரையத்தினிடையடிமை விழலாமோ:-

அடியேன் எரி மயமான நரகிடை விழலாமோ! விழாதவண்ணம் ஆட்கொண்டருள்வீர்.

தத்து கவனவரிணத்து:-

தத்து கவன அரிணம். தத்து - வேகமான, கவனம் - நடை. அரிணம்-மான்.

உபநிட விதத்து முநியுதவு:-

வள்ளி மலையில் தவஞ்செய்த உபநிடதங்களை யுணர்ந்த சிவமுனிவர் பார்வையால் மானிடம் வள்ளி தோன்றுமாறு செய்தார்.

மொழியாறுத் தத்தை நறவை யமுதத்தை:-

மொழியால்துத்தத்தை நறவை அமுதத்தை பால், தேன், அமுதம் இவற்றை நிகர்க்கின்ற இனிய மொழியையுடையவன்.

தத்துததி துரகதத்து மிகுதி திசர்:-

தத்து - தாவுகின்ற, உததி - கடல் போன்ற. துரகதம் - குதிரை. திதிசர் - திதி பெற்றவர்கள்; தைத்தியர்கள்.

தத்து மலையவுணர்:-

தத்து - தாவுகின்ற மலை போன்ற அவுணர்கள்.