பக்கம் எண் :


170 திருப்புகழ் விரிவுரை

 

குல நாகந் தந்த:-

குலம்-கூட்டம். சர்ப்பம் போன்று கூட்டமாக வந்த அந்த அசுரர்கள் நடுங்குமாறு முருகர் மயில்மீது சென்று அழித்தருளினார்.

கருத்துரை

நாககிரி நாதனே! நரகிடை விழாவண்ணம் நல்லருள் செய்வீர்.

157

அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
தத்தை மார்க்குத் தமராயன்
பற்ற கூட்டத்திற்ப ராக்குற் 
றச்சு லதோட்பற் றியவோடும்
சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித் திணிதாய
சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப் பெறுவேனோ
கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக் கரசாய
குக்கு வாத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக் குமரேசா
தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
தெட்டு மேற்றுத் திடமேவும்
தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
சத்ய வாக்யப் பெருமாளே.

பதவுரை

கொத்து நூற்றுபத்து நாட்டம்-கூட்டமாக ஆயிரங்கண்களையுடைய, கொற்ற வேத்துக்கு-வீரவேந்தனாகிய இந்திரனுக்கு, அரச ஆய-அரசனாக விளங்கும், குக்குட அத்த-கோழிக் கொடியை ஏந்திய கரத்தினரே! சர்ப்ப கோத்திர- நாகமலையினரே! பொற்ப-அழகரே! வேல் கை குமர ஈசா-வேலை ஏந்தும் திருக்கரத்தையுடைய குமாரக் கடவுளே! தத்வம்-தத்துவங்களான, நாற்பத்துஎட்டும் நாற்பத்து எட்டும்-தொண்ணூற்றாறினையும், ஏற்று திடம் மேவும்-ஏற்றுக் கொண்டு உறுதியுடன் கூறும், தர்க்க சாத்ர-தருக்க நூல்களில் சொல்லப்பட்ட, தக்க மார்க்க, தகுந்த நீதி வழிகளில், சத்ய வாக்ய-சத்தியமான மொழிகளைக் கூறும்; பெருமாளே-பெருமிதம்உடையவரே! அத்த வேட்கை பற்றி நோக்கு-பொருளில்