கப்பனு மெச்சிட மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்ப கிரிச்சுரர் பெருமாளே. பதவுரை பத்தர் கண ப்ரிய-அடியார் திருக்கூட்டத்தின் மீது அன்புள்ளவரே! நிர்த்தம் நடித்திடு-நடனம் ஆடவல்ல, பட்சி நடத்திய குக-மயிலை வாகனமாகக் கொண்டு நடாத்துகின்ற குகமூர்த்தியே! கத்திய தத்தை களைத்துவிழ-கத்துகின்ற கிளிகள் களைத்து விழும்படி, திரி கல் கவண் இட்டு எறி-சுழற்றும் கவணில் கல்லை வைத்து எறிகின்ற, திணைகாவல் கற்ற-தினைப்புனத்தைக் காவல் செய்யக் கற்றுக் கொண்ட, குறத்தி-வள்ளிபிராட்டியாருடைய, நிறத்த கழுத்து அடி-நல்ல நிறமுடைய கழுத்தின் அடியில் கட்டி அணைத்த-கட்டி தழுவிய, பன் இருதோளா-பன்னிரு தோள்களையுடையவரே! கத்தியை ஒக்க இடத்தினில் வைத்த-பராசக்தியைப் பொருந்தும்படி இடப் பாகத்தில் வைத்தருளிய, தகப்பனும் மெச்சிட-தந்தையராகிய சிவபெருமானும் மெச்சும்படி, மறை நூலின்- வேத நூலின் தத்துவம் தற்பரம் முற்றும் உணர்த்திய-உண்மைப் பொருள் பரம்பொருள் ஆகிய எல்லாவற்றையும் உபதேசித்து விளக்கிய, சர்ப்ப கிரி-நாக கிரியில் வாழ்கின்ற, சுரர் பெருமாளே-தேவர்கள் போற்றும் பெருமையில் மிகுந்தவரே! பூர்வ-கிழக்கு, பச்சிம-மேற்கு, தட்சிண-தெய்கு, உத்தர-வடக்கு, திக்கு உள பத்தர்கள்-திசைகளில் உள்ள அன்பர்கள், அற்புதம் என ஓதும்-இது அற்புதம் அற்புதம் எனக் கொண்டாடுகின்ற, சித்ர கவித்துவ-அழகிய கவிபாடுந் திறத்தின், சத்தம் மிகுந்த-ஒலி மிகுந்துூளள, திருப்புகழை, திருப்புகழை சிறிது அடியேனும்-சிறிதளவு அடியேனும், செப்பு என வைத்து-சொல்லும்படியாக வைத்தும், உலகில் பரவ-அப்பாடல்கள் உலகில் பரவும்படியாக, தெரிசிக்க- உம்மை தெரிசித்த, அநுக்ரகம் மறவேனே-அருள் புரிந்ததை அடியேன் மறக்கமாட்டேன். பொழிப்புரை அடியார் திருக்கூட்டத்தில் அன்புள்ளவரே! நடனம் ஆடவல்ல மயிலை வாகனமாகக் கொண்டவரே! குக மூர்த்தியே! ஒலி செய்கின்ற கிளிகள் சோர்ந்து விழும்படி, சுழற்றும் கவணில் கல்லை விட்டு எறிந்த தினைப்புனத்தின் காவலைக் கற்றுக் கொண்ட வள்ளிநாயகியின், நல்ல நிறமுள்ள கழுத்தின் அடியில் கட்டித் தழுவிய பன்னிரு தோள்களை யுடையவரே! பராசக்தியை இடப்பாகத்தில் பொருந்த வைத்த தந்தையாகிய சிவபெருமான் மெச்சும்படி, வேத நூலின் உண்மைப் பொருள்களையும், உயர்ந்த பொருள்களையும் உபதேசித்தவரே! நாககிரியில் வாழுபவரே! |