வே தாள ஞான கீனன் விதரண நாதானி லாத பாவி யநிஜவன் வீணாள்ப டாத போத தவமிலி பசுபாச வ்யாபாரமூடன்யானு முனதிரு சீர் பாத தூளி யாகி நரகிடை வீ ழாம லேசு வாமி திருவருள் புரிவாயே தூ தாள ரோடு காலன்வெருவிட வேதாமு ராரி யோட அடுபடை சோ ராவ லாரி சேனை பொடிபட மறைவேள்விச் சோ மாசி மார்சி வாய நமவென மா மாய வீர கோர முடனிகல் சூர் மாள வேலை யேவும் வயலிலி லிளையோனே கூதாள நீப நாக மலர்மிசை சாதாரி தேசி நாம க்ரியைமுதல் கோ லால நாத கீத மதுகர மடர்சோலை கூராரல் தேரு நாரை மருவிய கா னாறு பாயு மேரி வயல்பயில் கோ னாடு சூழ்வி ராலி மலையறை பெருமாளே. பதவுரை தூது ஆளரோடு காலன்வெருவிட-தன்னுடைய தூதர்களுடன் காலன் அஞ்சவும், வேதா-பிரமாவும், முராரி ஓட-திருமாலும் அஞ்சி ஓடவும், அடு படை சோரா - கொல்லவல்ல படைகள் சோர்ந்து, வலாரி சேனை பொடிபட- இந்திரனுடைய சேனைகள் பொடிபட்டு அழியவும், மறைவேள்வி-வேத மந்தரங்களுடன் கூடிய யாகங்கள், சோமாசிமார்-சோமயாக முதலியன செய்யும் பெரியோர்கள், சிவாயநம என-சிவாயநம என்ற ஐந்தெழுத்தை ஓதித்துதிக்கவும், மாய வீர கோரம் உடன் இகல்-பெரிய மாயங்களும் வீரமும் கோரமும் பொருந்தப் போர் செய்த, சூர்மாள-சூரபன்மன் இறக்கும்படி, வேலை ஏவும்- வேலாயுதத்தை விடுத்தருளிய, வயலியில் இளையோனே-வயலூரில் வீற்றிருக்கும் இளையவரே! கூதாள-கூதாள மலரிலும், நீப-கடப்பமலரிலும், நாக மலர்மிசை-சுரபுன்னை மலரிலும், சாதாரி-சாதாரி என்ற பண், தேசி-தேசி என்ற பண், நாமக்ரியை முதல்-நாத நாமக்கிரியை என்ற பண் முதலியவற்யையும், கோலால-கோலாகலமாக, நாத கீத-நாதகீங்களைப் பாடும், மதுகரம் அடர்சோலை-வண்டுகள் நிறைந்த சோலைகளும், கூர் ஆரல் தேரும்- மிகுதியாக ஆரம் மீன்களை ஆய்ந்து தேடுகின்ற, நாரை மருவிய - நாரை என்ற நீர்ப்பறவைகள் பொருந்திய, |