“பசித்திரைக் கிசை கூவும் பெடைத்திரட் களித்த குக்குடக் கொடிக் கரத்த”- (கடற்செகத் தடக்கி) திருப்புகழ். சிறகையடித்துக் கொக்கறுகோ என்று கோழி கொக்கரிக்கும். சற்சித்து தொற்புத்திப் பட்சத்தர்க்கு:- சத்து-உண்மை. சித்து-அறிவு. சொல்-பழமை. புத்தி-ஞானம். பட்சம்-அன்பு. இவற்றையுடையவர் சிவபெருமான். அட்சத்துச் சத்தத்தை:- அட்சரத்து என்ற சொல் அட்சத்து என வந்தது. இனிய எழுத்துக்களால் ஆன தேவாரப் பாடலை சம்பந்தர் சிவபிரானுக்கு ஒப்பித்ததை இங்கே குறிப்பிடுகின்றார். தட்சப் பற்று:- தட்சணம் என்ற சொல், தட்சம் என வந்தது. பற்று தட்சணமே வந்து பற்றும் திறனுடையது. கெர்ப்பத்தில் செல்:- பற்று கருவிலேயே சென்று பற்றும். பற்று அற்றால் பிறப்பறும். (அருணகிரியாருக்கு) அப்பற்றை அகற்றிய ஆறுமுகப் பெருமான் நாககிரியில் எழுந்தருளியிருக்கின்றார். கருத்துரை நாககிரி முருகா! உம்மைப் பாட உமது திருவடிகளைத் தந்தருள்வீர். கொடிய மறலியு மவனது கடகமு மடிய வொருதின மிருபதம் வழிபடு குதலை யடிவ னினதருள் கொடுபொரு மமர்காண குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு மறுமுகமும் வெகு நயனமும் ரவியுமிழ் கொடியு மகிலமும் வெளிபட இருதிசை யிருநாலும் படியு நெடியன எழுபுண ரியுமுது திகிரி திகிரியும் வருகென துரகத பவுரி வருமொரு மரகத துரகத
மிசையேறிப் பழைய அடியவ ருடனிமை யவர்கண மிருபு டையிமிகு தமிழ்கொடு மறைகொடு |