பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 183

 

“பசித்திரைக் கிசை கூவும் பெடைத்திரட்
களித்த குக்குடக் கொடிக் கரத்த”- (கடற்செகத் தடக்கி) திருப்புகழ்.

சிறகையடித்துக் கொக்கறுகோ என்று கோழி கொக்கரிக்கும்.

சற்சித்து தொற்புத்திப் பட்சத்தர்க்கு:-

சத்து-உண்மை. சித்து-அறிவு. சொல்-பழமை. புத்தி-ஞானம். பட்சம்-அன்பு.

இவற்றையுடையவர் சிவபெருமான்.

அட்சத்துச் சத்தத்தை:-

அட்சரத்து என்ற சொல் அட்சத்து என வந்தது.

இனிய எழுத்துக்களால் ஆன தேவாரப் பாடலை சம்பந்தர் சிவபிரானுக்கு ஒப்பித்ததை இங்கே குறிப்பிடுகின்றார்.

தட்சப் பற்று:-

தட்சணம் என்ற சொல், தட்சம் என வந்தது. பற்று தட்சணமே வந்து பற்றும் திறனுடையது.

கெர்ப்பத்தில் செல்:-

பற்று கருவிலேயே சென்று பற்றும். பற்று அற்றால் பிறப்பறும். (அருணகிரியாருக்கு) அப்பற்றை அகற்றிய ஆறுமுகப் பெருமான் நாககிரியில் எழுந்தருளியிருக்கின்றார்.

கருத்துரை

நாககிரி முருகா! உம்மைப் பாட உமது திருவடிகளைத் தந்தருள்வீர்.

161

கொடிய மறலியு மவனது கடகமு
மடிய வொருதின மிருபதம் வழிபடு
குதலை யடிவ னினதருள் கொடுபொரு     மமர்காண
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
மறுமுகமும் வெகு நயனமும் ரவியுமிழ்
கொடியு மகிலமும் வெளிபட இருதிசை     யிருநாலும்
படியு நெடியன எழுபுண ரியுமுது
திகிரி திகிரியும் வருகென துரகத
பவுரி வருமொரு மரகத துரகத                மிசையேறிப்
பழைய அடியவ ருடனிமை யவர்கண
மிருபு டையிமிகு தமிழ்கொடு மறைகொடு