பரவ வருமதி லருணையி லொருவிசை வரவேணும் சடில தரவிட தரபணி தரதர பரசு தரசசி தரசுசி ரைவித தமரு கமிருக தரவனி தரசிர
தரபாரத் தரணி தரதநு தரவெகு முககுல தடினி தரசிவ சுதகுண தரபணி சயில விதரண சுதகுண தரபணி
மயில்வாழ்வே நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ எயிறு சுழல்விழி தழலெழஎழுகிரி நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ நெடுவானும் நிலனும் வெருவர வருநிசி சரர்தள நிகில சகலமு மடியவொர் படைதொடு நிருப குருபர சுரபதி பரவிய
பெருமாளே. பதவுரை சடில தர-சடாபாரத்தைத் தாங்குபவரும், விடதார-ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்தவரும், பணிதர-பாம்புகளை ஆபரணமாகத் தரித்தவரும், தர பரசுதா-மேன்மை தங்கிய மழுவைத் தாங்கியவரும், ரதிதர-சந்திரனை முடியிற் தரிசித்தவரும், சுசிதர-தூய்மையை யுடையவரும், இத தமருக மிருகதர-இனிய நாதத்தையுடைய உடுக்கையையும், மானையும் திருக்கரங்களில் தரித்தவரும், வனிதர-பார்வதி தேவியை இடப்பாகத்தில் தரித்தவரும், சிரதர-பிரம சிரங்களைத் தாங்குபவரும், பாரதரணிதர-சுமையை யுடைய பூமியைத் தாங்குபவரும், தநுதர-மேருகிரியை வில்லாகத் தரித்தவரும், வெகு முககுல தடினிதர-ஆயிரம் முகங்களையுடைய சிறந்த கங்காதேவியைத் தரித்தவரும் ஆகிய, சிவ சுத-சிவபெருமானுடைய திருப்புதல்வரே! குணதர- அருட்குணங்களை யுடையவரே! பணிசயில-திருச்செங்கோட்டில் எழுந்தருளி யிருப்பவரே! விதரண-தயாள முடையவரே! தருபுர சசிதரு-கற்பக நாட்டிலுள்ள இந்திராணி பெற்றெடுத்த, மயில் வாழ்வே-மயில்போன்ற தெய்வயானை யம்மையாருக்கு வாழ்வாக விளங்குபவரே! நெடிய உடல் உரு இருள் எழ- (அசுரர்களுடைய) நீண்ட உடம்பின் கரிய வடிவத்திலிருந்து இருள் வீசவும், எயிறு நிலவு எழ-பற்களிலிருந்து ஒளி வீசவும், சுழல் விழி தழல் எழ- சுழல்கின்ற கண்களில் நெருப்புப்பொறி வீசவும், எழுகிரி நெரிய-ஏழு குல மலைகள் நெரீந்து பொடிபடவும், அதிர் குரல் புகை எழ-அதிர்கின்ற குரலிலிருந்து புகை எழவும், இடி எழ-இடியோசையைப் போன்ற ஒலியுண்டாகவும், நெடுவானும்-விசாலமான ஆகாயமும், நிலனும்-பூமண்டலமும், வெருவர- |