கொல்லிமலை சேலம் ஜில்லா நாமக்கல்லுக்கு அருகில் உள்ளது. கருத்துரை கொல்லி மலைக்குத் தலைவராய குமாரக் கடவுளே! மாதராசையால் பொருளை நாடி வருந்துவது தகாது. தொல்லைமுதல்தானொன்று மெல்லியிரு பேதங்கள் சொல்லுகுண மூவந்த மெனவாகி துய்யசதுர்வேதங்கள் வெய்யபுல னோரைந்து தொய்யு பொரு ளாறங் மெனமேவும் பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள் பல்குதமிழ் தானொன்றி யிசையாகிப் பல்லுயிரு மாயந்த மில்லைசொரு பானந்த பௌவமுற வேநின்ற தருள்வாயே கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு கல்வருக வேநின்று குழலூதுங் கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று கொள்ளைகொளு மாரன்கை யலராலே கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த கொல்லிமலை மேனின்ற பெருமாளே. பதவுரை கல்உருக-கல்உருகும்படியும், அல்லல் படு-துன்பப்படுகின்ற, கோ-பசுக்கள், அம் புகல் வருகவே நின்று-அழகிய புகுமிடத்திற்கு வந்து சேரும்படியும் நின்று, வேயின்கண் குழல் ஊதும்-மூங்கிலால் அமைந்த புல்லாங்குழல் வாசித்த, கையன் மிசை ஏறு-கண்ணபிரானாகிய மால் விடையின்மீது ஏறுகின்ற, உம்பன்-பெரியோனும், நொய்ய சடையோன்-புன்சடையோனும், எந்தை-எமது பிதாவுமாகிய சிவபெருமான், கை தொழ-கைகுவித்துத் தொழ, மெய்ஞானம் சொல்-உண்மை ஞானத்தை உபதேசித்த, கதிர் வேலா-ஒளிமிகுந்த வேலாயுதரே! கொல்லை மிசை வாழ்கின்ற-தினைக் கொல்லையில் வாழ்ந்திருந்த, வள்ளி புனமே சென்று-வள்ளி நாயகியின் புனத்தில் சென்று, கொள்ளை கொளும்- உயிரைக் கொள்ளை கொள்ளுகின்ற, மாரன் கை அலராலே-மன்மதனுடைய கை மலர்க்கணையின் செய்கையால், தழையே கொய்து கொண்டு செல்லும்- |