பக்கம் எண் :


200 திருப்புகழ் விரிவுரை

 
164

மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு
போகஇந்த் ராதிசிலை தோற்ற நுகல்கொடு
மானவண்டேறுகணை தோற்ற விழிகொடு       கண்டுபோல
மாலர்கொண்ட டாடுகனி தோற்ற இதழ்கொடு
சேலைசென் நூதுகுயில் தோற்ற இசைகொடு
வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு       மன்றுளாடி
சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு
போகபண் டாரபணி தோற்ற அரைகொடு
தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு          வந்துகாக
தேடுகின்ற றாரொடு மெய் தூர்த்த னெனவுற
வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு
சீவனொன் றானபர மார்த்த தெரிசனை             வந்துதாராய்
வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்
மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை
வீனென் பானொருப ராக்ர னெனவர               அன்றுசோமன்
மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக
ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை
வீழநன் பாரதியு மூக்கு நழுவிட                      வந்தமாயன்
ஏகநின் றாகியமர் தோற்று வதறிட
வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைக
ளேறிவென் றாடுகள நீக்கி முனிவரர்                வந்துசேயென்
றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை
தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய
ராஜகம் பீரவள நாட்டு மலைவளர்                   தம்பிரானே.

பதவுரை

வேகம் உண்டாகி-கோபம் தோன்றி, உமை சாற்றும் அளவில்-உமாதேவியார் சொன்னவுடன், மாமகம் கூரும் அது தீர்க்க-தக்கனுடைய பெரிய யாகம் மிகுதியாக நடப்பதை அழிக்கும் பொருட்டு, வடிவு உடை வீரன் என்பான்- அழகுடைய வீரபத்ரன் என்ற, ஒரு பராக்ரன் எனவர-ஒப்பற்ற பேராற்றலுடையவர் தோன்றிவர, அன்று-அந்நாளில், சோமன்-சந்திரன், மேனியும் தேய-உடம்புந் தேயவும், கதிர்தோற்ற எயிது உக-சூரியனுக்கு உள்ள பற்கள் உதிரவும், ஆன் உகும் தீகை அற-பசுவின்