பூந்துறை நாட்டில் விளங்குவது. ஈரோடுக்கு அப்பால் உள்ள ஈங்கூர் என்ற புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள அரிய திருத்தலம். ஈரோடிலிருந்து பஸ் வசதி உண்டு. மலைமீது கார் போகப் பாதையுள்ளது. சுவாமி மிக்க வரதர். சித்தர்கள் பலர் தவஞ்செய்த இடம். கருத்துரை சென்னிமலை மேவும் செம்மலே! அநுபூதி ஞான இன்பத்தைத் தந்தருள்வீர். ஊதிமலை ஆதிமக மாயியம்பை தேவிசிவ னார்மகிழ்ந்த ஆவுடைய மாதுதந்த குமரேசா ஆதரவ தாய்வருந்தி யாதியரு ணேசரென்று ஆளுமுனை யேவணங்க அருள்வாயே பூதமது வானவைந்து பேதமிட வேயலைந்து பூரணசி வாகமங்க ளறியாதே பூணுமுலை மாதர்தங்கள் ஆசைவகை யேநினைந்து போகமுற வேவிரும்பு மடியேனே நீதயவ தாயிரங்கி நேசவரு ளேபுரிந்து நீதிநெறி யேவிளங்க வுபதேச நேர்மைசிவ னார்திகழ்ந்த காதிலுரை வேதமந்த்ர நீலமயி லேறிவந்த வடிவேலா ஓதுமறை யாகமஞ்சொல் யோகமது வேபுரிந்து ஊழியுணர்வார்கள்தங்கள் வினைதீர ஊனுமுயி ராய்வளர்ந்து ஓசையுடன் வாழ்வுதந்த ஊதிமலை மீதுகந்த பெருமாளே. பதவுரை ஆதிமகமாயி-முதன்மைபெற்ற பெரிய மாயியாக விளங்குபவரும், அம்மை- அம்பிகையும், தேவி-ஒளிபெற்றவரும், சிவனார் மகிழ்ந்த ஆவுடைய மாது- சிவபெருமான் மகிழ்கின்ற ஆவுடையாள் என்னும் சிறப்பையுடையவளுமாகிய உமாதேவியார், தந்த-பெற்றருளிய, குமர ஈசா-திருக்குமாராகிய தலைவரே! பூதம் அது ஆன ஐந்து பேதம் இடவே |