மதுர மெனநதி:- மதுரம் என்ற ஆற்றில் வெள்ளம் பெருகி இரு கரைகளிலும் மோதி, மலையாடுகள், அகில் மரங்கள், மருத மரங்கள், முதலியன வேருடம் சாயும்படிக் குதித்து கொண்டுவரும் வளம் பொருந்தியது. குருடிமலை:- இது கோவைக்கு அடுத்த துடியலூர் புகைவண்டி நிலையத்துக்கு அருகில் உள்ளது. கருத்துரை குருடி மலை வாழுங் குமர! திருடிநெருடி கவிபாடும் புலவர்களின் நெறியில் என் மனம் செல்லாது. தென்சேரிகிரி எங்கேனு மொருவர்வரஅங்கேக ணினிதுகொடு இங்கேவ ருனதுமயல் தரியாரென் றிந்தாவெ னினியிதழ் தந்தேனை யுறமருவ என்றாசை குழையவிழி யிணையாடித் தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள் சந்தேக மறவெபறி கொளுமானார் சங்கீத கலவீநல மென்றோது முததிவிட தண்பாடு முனதருளை யருள்வாயே சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு சந்தாரும் வெதிருகுழ லதுவூதி தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள் தங்கூறை கொடு மரவி லதுவேறுஞ் சிங்கார அரிமருத பங்கேரு கனுமருள சென்றேயும் அமரருடை சிறைமீளா செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு தென்சேரி கிரியில் வரு பெருமாளே. பதவுரை சங்கோடுதிகிரி அது-சங்கத்துடன் சக்கரத்தை, கொண்டு-கரங்களில் தாங்கிக் கொண்டு, ஏயும் நிரை பிறகு-சேர்ந்துவாழும் பசுக்கூட்டத்தின் |