பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 233

 

“அல்லும் பகலுமில்லாச்
சூதானதற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய்இனிமனமே தெரியாதொரு பூதர்க்குமே” - அலங்காரம் (17)

“கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள்வனசந் தரவென் றிசைவாய்”       அநுபூதி (21)

இரவுபக லற்றவிடத் தேகாந்த யோகம்
வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே
கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி
எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே.    - தாயுமானார்.

அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ்:-

செந்தமிழ் செம்மைப் பண்புடையது. ஏனைய மொழிகளைப் போல் தேய்ந்தும் இறந்தும் உருமாறியும் சிதைந்தும் போகாமல் என்றும் நின்று வளர்கின்ற மொழி தமிழ்.

“என்றுமுள தென்றமிழ் இயம்பு இசைகொண்டான்”- தாயுமானார்.

அன்பொடு துதிக்கமனம் அருள்வாயே:-

செந்தமிழ்பாடல்களால் செம்மேனி எம்மானை எம்புருகிக் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி‘ துதிக்க வேண்டும்.

என்பே விறகா இறைச்சி யறுத்திட்டு
பொன்போன் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போடுருகி யகங்குழைவார்க் கன்றி
என்பேன் மணியினை யெய்த வொண்ணாதே  - திருமந்திரம் (272)

சந்திர வெளிக்கு வழி:-

ஆநாதாரமுங்கடந்து, பிரமந்திரமுந் தாண்டி சந்திர மண்டலமாகிய அமுத மண்டலத்துடன் கூடிய மேலைவெளி.

“நாமமதி மீதி லூறுங்கலா இன்ப        அமுதூறல்
   நாடிய யதன்மீது போய்நின்ற ஆனந்த
   மேலைவெளியேறி நீயின்றி நானின்றி
   நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே”
                                    (மூளும்வினை) திருப்புகழ்.

தண்டிகை.............................அருள்வாயே:-

பல்லக்கு பெருமை முதலியன விரும்பும் ஆன்மாக்களும், அவற்றை இறைவனிடங் கேட்டு உய்யும் பொருட்டு விருப்புவெறுப்பற்ற சுவாமிகள் இங்ஙன் கூறியருளினார்கள்.

மண்டலிகர்.........................அருள்வாயே:-

மன்னர்கள் மன்னுயிரை இனிது அறநெறி வழுவாது புரந்துய்யுமாறு வேண்டுகின்றார்.

“வேந்தனும்ஓங்குக”