தீர்த்த:- தீர்த்தன் - பரிசுத்தமானவன். “ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” தீருவெம்பாவை. எனதக மேட்டையுடனினை ஏத்த அருளுடனோக்கியருளுதி:- அகம் ஏட்டை; ஏட்டை-விருப்பம்; அகம்-உள்ளம்; உள்ளத்தில் விருப்பமுடன் இறைவனுடைய புகழை ஏத்த வேண்டும். அப்பெருமான் அருட்கண்ணால் நோக்கியருளுவான். தீர்த்தமலை:- மொரப்பூர் புகைவண்டி நிலையத்துக்கு 8 கல் தொலைவில் உள்ள ஹரூக்கு வடகிழக்கே 9.30 கல் தொலைவில் உள்ள தலம். மலையடிவாரத்திலும் மலைமீதும் ஆலயங்கள் இருக்கின்றன. சைவ எல்லப்பநாவல் பாடிய தலபுராணம் உண்டு கருத்துரை ஏ மனமே! நீ முருகனை மருவுவாய். கனகமலை அரிவையர்கள் தொடரு மின்பத் துலகுநெறி மிகம ருண்டிட் டசடனென மனது நொந்திட் டயராமல் அநுதினமு முவகை மிஞ்சிச் சுகநெறியை விழைவு கொண்டிட் டவநெறியின் விழைவு மொன்றைத் தவிர்வேனோ பரிதிமதி நிறைய நின்ஃ தெனவொளிரு முனது துங்கப் படிவமுக மவைகள் கண்டுற் றகமேவும் படர்கள்முழு வதும் கன்றுட் பரிவினொடு துதிபு கன்றெற் பதயுகள மிசைவ ணங்கற் கருள்வாயே செருவிலகு மசுரர்மங்கக் குலகிரிகள் நடு நடுங்கத் சிலுசிலென வளைகு லுங்கத் திடமான |