பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 249

 

ஆடுகின்ற, மனப்பாம்பை நாமும் அடக்கி ஒடுக்கி ஆளவேணும் என்பது இதன் உட்குறிப்பு.

கோம்பைகள் குலாவு:-

காவல் நாய்களாக உலாவுகின்ற ஜாதி நாய்கள் கோம்பை நாய்கள்.

பூம்பறை:-

கொடைக்கானலுக்கு மேற்கே 8 கல் தொலைவில் உள்ள தலம்.

கருத்துரை

பூம்பறை மேவு முருகா! பொதுமகளிர் உறவு ஆகாது.

கழுகுமலை

178

குதலை மொழியினார் நிதிக் கொள் வாரணி
முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்
கொடியது கொடிததால் வருத்த மாயுறு          துயராலே
மதலை மறுகிவா லிபத்தி லேவெகு
பதகர் கொடியவா ளிடத்தி லேமிக
வறுமை புகல்வரே யெனக்கு மோஇனி         முடியாதே
முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்
மடிய அயிலையே விடுத்த வாகரு
முகிலை யனையதா நிறத்த மால்திரு           மருகோனே
கதலி கமுகுசூழ்வயற்கு ளேயளி
யிசையை முரலமா வறத்தில் மீறிய
கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய           பெருமாளே.

பதவுரை

முதல்-முதல்வரே! வரிவிலோடு எதிர்த்த-கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த, சூர் உடல் மடிய-சூரபன்மனுடைய உடல் அழியுமாறு, அயிலை விடுத்தவா-வேலாயுதத்தை விடுத்தவரே! கருமுகிலை அனையது ஆம்நிறத்த-கருமேகத்தை ஒத்த நிறத்தையுடைய, மால் திருமருகோனே-திருமாலின் திருமருகரே! கதலி-வாழையும், கமுகு சூழ் வயல்-பாக்கு மரங்களும் சூழ்ந்துள்ள வயல்களில், அளி இசையை முரள- வண்டுகள் இசையை ஒலிக்க, மா அறத்தின் மீறிய-சிறந்த அறச் செயல்கள் மேம்பட்டு விளங்கும், கழுகுமலை மகா நகர்க்கு உள்மேவிய-கழுகுமலையில் சிறந்த நகரத்தில் விற்றிருக்கும் பெருமாளே-