விரிவுரை மைக்கணிக்கன் வாளி போல:- மை கண் இக்கன் வாளி. இக்கு-கரும்பு. கரும்பு வில்லையுடைய மன்மதன் இக்கன். விலைமாதர்களின் மைபூசிய கண்கள் மன்மதனுடைய மலர்களைப் போல் கொடுமை செய்ய வல்லவை. உள்களத்தை மாறிநாடி:- கள்ளத்தை என்ற சொல் களத்தையென வந்தது. மனத்துக்குள் உள்ள திருட்டுத்தனத்தை வெளிக்குக் காட்டாமல் மறைத்து வைத்து, விரும்புவதுபோல் நடிப்பர். மட்டுமுற்ற கோதை போத முடிசூடி:- மட்டு-தேன், வாசனை, கோதை-பூமாலை. போத-செவ்வையாக இக்கு வைக்கு மாடை:- இக்கு-தடை. தடையாயுள்ள ஆடை. இசைபேசி:- இசைதலைப் பேசி உறவாடுவர். பக்க சூல:- பக்கம்-பகுப்புற்ற-மூன்று பிரிவாகவுள்ள சூலம். செக்கை:- செங்கை எனும் கூத்து. நூற்றெட்டுக் கரணம் உடையது. மாறுதாரம்:- மாறுதாரம்-மறுவுத்தரம். விக்குமூடு:- விக்கம்-வீக்கம்-கர்வம். “கடல் இலங்கைக் கோமான் தன்னை வீக்கம் தவிர்த்த விரலார்” - அப்பர். திக்கமுட்டி:- திக்க-பல வழியாகச் சிதறுமாறு செப்பு வெற்பு:- செப்பு வெற்பு-பொதியமலை. “செம்புடற் பொதிந்த தெய்வப் பொதியமும்” “தென்கால் விடுக்கும் செம்பிற் பொருப்பு” - கல்லாடம்.. |