கருத்துரை பொதிகமலை மேவு வடிவேலா! மாதராசையால் மானக்குறைவு அடையாமல் காத்தருள்வீர். வெடித்த வார்குழல் விரித்து வேல்விழி விழித்து மேகலை பதித்து வார்தொடு மிகுந்த மாமுலை யசைத்து நூலின்ம ருங்கினாடை மினுக்கி யோலைகள் பிலுக்கியேவளை துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி மிரட்டி யாரையு மழைத்து மால்கொடு தந்தவாய்நீர் குடித்து நாயென முடக்கு மேல்பிணி யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர் குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் மங்குவேனைக் குறித்து நீயரு கழைத்து மாதவர் கணத்தின் மேவென அளித்து வேல்மயில் கொடுத்து வேதமு மொருத்த னாமென சிந்தைகூராய் உடுட்டு டூடுடு டுடுட்டொடோவென திகுத்த தீதிகு திகுர்த்த தாவென உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி ரங்குபோரில் உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ ரும்பராரை அடைத்த மாசிறை விடுத்து வானுல களிக்கு மாயிரதிருக்க ணாரை சளித்து நாளுமெ னுளத்தி லேமகி ழுங்குமாரா அளித்த தாதையு மிகுத்த மாமனும் அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ் அகத்ய மாமுனி பொருப்பின் மேவிய தம்பிரானே. பதவுரை உடுட்டு டூடுடு டுடுட்டொ டோஎன-உடுட்டு டூடுடு டுடுட்டொடோ எனவும், திகுத்த தீதிகு திகுர்த்த என-திகுத்த தீதிகு திகுர்த்த எனவும், உடுக்கை, பேரிகை தவில் குழாமும்-உடுக்கை பேரிகை தவில் இவை |