பக்கம் எண் :


26 திருப்புகழ் விரிவுரை

 

பயனில் சொல்பாராட்டுவானை மகனெனல்
மக்கட்பதடி யெனல்              - திருக்குறள்

தபோதனர்:-

வீண் வார்த்தை பேசாத முனிவர் பயனுடைய சொற்களையே பகர்வார்கள்.

அடியேனை இராகமும் விநோதமு முலோபமுடன் மோகமு மிலானிவனுமா புருஷ னெனஏய:-

தவமுனிவர்கள் என்னைப் பார்த்து “இவன் ஆசை, களியாட்டம், உலோபம், மோகம் முதலிய குற்றங்கள் இல்லாதவன்; உத்தமமான சிறந்த புருஷன்” என்று புகழ வேண்டும். பெரியோர்களால் பாராட்டப்பட வேண்டும்.

மநோலய சமாதிய நுபூதி பெற:-

அஷ்டாங்க யோகத்தில் சமாதி எட்டாவது படி. அங்கு மநோலயம் உண்டாகும்.

“பகரொணாதது சேர வொணாதது
   நினையொ ணாதது வானதயாபர
   பதியதான சமாதி மநோலயம் வந்து தாராய்”
                                 - (தறையின்மா) திருப்புகழ்.

நிலாவிரி நிலாமதி:-

நிலா - சந்திரிகை.அமிர்த சீத ஒளியை உலகெங்கும் பரப்புகின்ற சந்திரன்.

நிலாதவ நிலாசன:-

நிலாத அநில அசன.

எங்கும் நில்லாமல்அலைகின்ற காற்றை ஆகாரமாகக் கொள்ளும் பாம்பு.

பாம்புக்கு காற்று ஆகாரம்.

“காலே மிகவுண்டு காலே இலாத கணபணம்”  -கந்தரலங்காரம் (41)

நியாய பரிபால அரு:-

அர - பாம்பு;இது ஆதிசேடனைக் குறிக்கின்றது. ஆதிசேடன் நாகராஜன். சிறந்த நியாயத்தைப் பரிபாலிக்கன்றவன். நல்ல அறிஞன். அறப்பண்புள்ளவன்.

ஆதிசேடனைச்சிவபெருமான் நாகாபரணமாக அணிந்திருக்கின்றார்.

“வாயுவான பஞ்சடைத்துத் திருமால் துயிலும் மலரணையே
ஆயவிடமாம் யாக்கையமைத் தரனார் அணியும் அரும்பணியே”
                                                       - செவ்வந்திப்புராணம்.