வாடை ஏரி:- கடல் நீரை மிகுதியாகாத வண்ணம் ஒழுங்குபடுத்துவது வடவைக்கனல். வேலைமாறாத திறல் வீரா:- முருகவேள் அருகில் எப்போதும் வேல் விலகாமல் விளங்கும். “வேலை மறவாத கரதலா விசாகா” - (இரதமானவாயூறல்) திருப்புகழ் கலகவாரி போல் மோதி வடவையாறு சூழ்சீத கதிர்காமம்:- வடவையாறு-மாணிக்க கங்கை. ஓர் அலை மற்றோர் அலையுடன் கலகம் புரிவது போல் மாறுவட்டு ஆரவாரத்துடன் மோதி வருகின்ற, நதி மாணிக்க கங்கை. இதன் கரையில் வானளாவிய குளிர்தருக்களுடன் கூடி விளங்குவது கதிர்காமம். கருத்துரை கதிர்காமக் கடவுளே! மனிதரைப் பாடியலையாவண்ணம் கண்பார்த்தருள்வீர். உடுக்கத் துகில்வேணு நீள்பசி யவிக்கக் கனபானம் வேணுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் இருக்கச்சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணுமிவ் வகையாவுங் கிடைத்துக் க்ருஹவாசி யாகிய மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ரவமேபோம் க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ கிரிக்குட் சுழல்வேனை யாளுவ தொருநாளே குடக்குச் சிலதூதர் தேடுக வடக்குச் சிலதூதர் நாடுக |