ஆகவே சிவமூர்த்தியோ பிறப் பிறப்பில்லாதவர். சிவமே முருகவேள் என்றமையால் முருகனுக்கும் பிற பிறப்பில்லை என்பது பெறப்பட்டது. “பெம்மான முருகன் பிறவான் இறவான்” - அநுபூதி (12) ஆதலினால் முருகன் திருஞான சம்பந்தராக அவதரித்தார் என்பது பதியிலக்கணத்துக்கு முரணாகும். அங்ஙனம் தெய்வச் சேக்கிழாரும் செப்பினாரில்லை. எனவே முருகவேள் திருவருள் திருஞான சம்பந்தரை அதிஷ்டித்து மதுரையில் சைவ சமயத் தாபனம் நிகழ்ந்தது. அதனால் முருகவேள் மீது அதனை வைத்து அருணகிரிநாதர் பல இடங்களில் இங்ஙனம் கூறுகின்றார் என உணர்க. கருத்துரை கதிர் காமவேலவரே! வீரப்புயாசலரே! வாணிதொழும் வள்ளலே! சைவசமயத்தாபகரே! ஒப்பற்ற அன்புடன் இடையறாது உமது திருவடியை நினைக்க அருள்புரிவீர். கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர் காமத் தரங்கம் மலைவீரா கனகத நககுலி புணரித குணகுக காமத் தனஞ்சம் புயனோட வடசிக ரகிரித விடுபட நடமிடு மாவிற் புகுங்கந் தவழாது வழிவழி தளதமரென வழிபடு கிலனென வாவிக் கினம்பொன் றிடுமோதான் அடவியி ருடியபி நவகும ரியடிமை யாயப் புனஞ்சென் றயர்வோனே அயிலவ சமுடன ததிதிரி தருகவி யாளப் புயங்கொண் டருள்வேனோ இடமொரு மரகத மயில்மிசை வடிவுள ஏழைக் கிடங்கண் டவர்வாழ்வே இதமொழி பகிரினு மதமொழி பகரினும் ஏழைக் கிரங்கும் பெருமாளே. |