பக்கம் எண் :


292 திருப்புகழ் விரிவுரை

 

மன்மதனை கரியலங்கார மாக்கினார் ஆகிய சிவபெருமானுடைய கண்களுக்குப் பிரியமான முத்தே! கதிர் காமத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளே! நாணல் காட்டில் இடைய உதித்தீர்! வலிமையுடன் குதித்துக் கொண்டு ஆற்றலோடு எதிர்த்து வந்த சூரபன்மனை, சரியாக நடந்த வரை விட்டுவைத்தீர்; சரிதப்பியபின் அடுத்து நெருங்கி வந்தீர்; உடல் இரு கூறாமாறு பிளந்தீர்; சிரத்தையும் மார்பையும் அறுத்துக் குவித்தீர்; அவனைக் கொன்றீர்; வெற்றிக் அடையாளமாகப் பல மாலைகளையும் சிறகையுடைய சேவலையும் பெற்றீர்; வெற்றி பெற்றீர்; இத்தகைய தேவரீர் அடியேனுக்கு உமது தாமரையன்ன அழகிய பாதமலரைத் தந்தருளுவீர்.

விரிவுரை

சரத்தேயுதித்தாய்:-

சரம்-தர்ப்பை. கங்கையின் அருகில் இருந்த தருப்பை வனஞ்சூழ்ந்த பொய்கையில் முருகவேள் தோன்றியருளினார். அதனால் சரவணபவன் என்ற திருநாமம் ஏற்பட்டது.

சரிப்போன மட்டேவிடுத்தாய் அடுத்தாய்:-

சூரபன்மன் அடக்கமாக வாழ்கின்ற வரை அவனை விட்டு வைத்தார். இறைவர்; தவறுகள் மிகுதியாகச் செய்யத் தொடங்கியப்பின் அவனை நெருங்கிப் போர் புரிந்தார்.

உடற்றான் இருகூறாய்:-

அவனிடம் இருந் அகங்காரம் மமகாரம் என்ற இரண்டையும் வேறு வேறாக்கி யழியுமாறு செய்தார்.

புரத்தார் வரத்தார் சரச்சேகரத்தார்:-

பொன், வெள்ளி, இரும்பு என்ற மூன்று லோகத்தால் ஆகிய கோட்டைகளையுடையவர்கள், திரிபுராதிகள். கமலாட்சன், தாரகட்சன், வித்யுன்மாலி என்போர். அவர்கள் வரப்பிரசாதம் பெற்றவர்கள்; பல சிறந்த பாணங்களைச் சேகரித்திருந்தார்கள்.

பொறுத்தார்:-

சிவபெருமான் திரிபுராதிகளைக் கண்டு பொறுமையுடன் இருந்தார்.

பரித்தார்:-

தேரும் வில்லும் அம்பும் கொண்டு போர்க்கோலந் தாங்கினார்.

சிரித்தார் எரித்தார்:-

ஒவ்வொரு தேவனும் தான் துணை செய்வதனால் தான்