பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 293

 

திரிபுரவதம் நிகழ்கின்றது என்று எண்ணித் தருக்குற்றார்கள். நமக்குத் தேரும் வில்லும் வேண்டுமோ” என்று திருவுளம் பற்றிச் சிவபிரான் சிறுநகை செய்தார். அந்நகையில் இருந்து தோன்றிய அனற் பொறியால் அப்புரங்கள் எரிந்து சாம்பலாயின.

கரித்தோலுரித்தார் விரித்தார் தரித்தார்:-

கஜமுகன் என்ற அவுணன் சிவபெருமான் மீது போருக்கு வந்தான். அந்த யானையை உரித்துத் தோலைச் சிவபெருமான் போர்த்துக் கொண்டார்.

கருத்தார் மருத்தார் மதனார்:-

பிரமாதி தேவர்கள், சிவபெருமான் சனகாதியருக்கு மௌன நிலையையுணர்த்தி யோகியாயிருந்த தவநிலையை பழிக்குமாறு மன்மதனுக்குக் கட்டளையிட்டார்கள்.

மன்மதன் அதைக் கேட்டு நடுங்கினான். “நான் தேவரையும் மூவரையும் சித்தரையும் முத்தரையும் மயக்குவேன். அனல் வடிவான சிவபெருமானை மயக்க முடியுமோ? அவர் கையுந்தழல்; கண்ணுந்தழல்; மெய்யுந்தழல்; தழலைப் புழு அணுகுமோ?” என்றெல்லாம் கூறினான் மன்மதன்.

அயன் முதலிய அமரர் வற்புறுத்தி யனுப்பினார்கள். அதனால் சிவன் பாதத்தில் “கருத்தார்” என்றார்.

மருத்து ஊர். மருத்து-காற்று. மன்மதனுக்குத் தென்றல் காற்று. தேர் தென்றற் காற்றாகிய தேரில் ஊர்பவன்.

குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னம் அணிவாற்கு-வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லையதன் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னும் உலகு      - சிவப்பிரகாசர்.

கணுக்கான முத்தே:-

“சிவபெருமானுடைய கண்ணுக்குப் பிரியமான முத்தையரே! என்று அருமையாக அருணகிரிநாதர் அழைக்கின்றார்.

கருத்துரை

கதிர்காமக் கடவுளே! உன் கழல் தாமலையைத் தந்தருள்வீர்.

191

சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
சகலயோ கர்க்குமெட்   டரிதாய
சமயபே த்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்