பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப யோதர நெருக்குற்ற இடையாலே பாகளவு தித்தித்த தீதமொழி யிற்புட்ப பாணவிழி யிற்பொத்தி விடுமாதர் காரணி குழற்கற்றை மேல்மகர மொப்பித்த காதில்முக வட்டத்தி லதிமோக காமுகன கப்பட்ட வாசையை மறப்பித்த கால்களைம றக்கைக்கும் வருமோதான் தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ சாசிரனை மர்த்தித்த அரியமான் சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்னத்ரி கோணசயி லத்துக்ர கதிர்காம வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு மேகலை யிடைக்கொத்தி னிருதாளின் வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை வேல்களி லகப்பட்ட பெருமாளே பதவுரை தேர்இரவி-தேரிலே வருகின்ற சூரியன், உட்கிபுகா-அஞ்சி உள்ளே புகாத, முது புரத்தில்-பழைய ஊராகிய இலங்கையில், தெசா சிரனை மர்த்தித்த-பத்துத் தலைகளையுடைய இராவணனைப் பிசைந்து கடைந்த, அரிமாயன்-திருமாலின், சீர்மருக-சிறந்த மருகரே! அதி உக்ர அதிக உக்கிரமான. யானைபடும்- யானைகள் எதிர்ப்படும், ரத்ன அத்ரி-இரத்தினங்கள் கிடைக்கும் மலையாகிய, கோண சயிலத்து-திருக்கோண மலையில் வீற்றிருக்கும், உக்ர கதிர்காம- உக்ரமான கதிர்காமக் கடவுளே! வீர-வீரமூாத்தியே! புனவெற்பில்-தினைப்புனம் நிறைந்த வள்ளி மலையில், கலாபி எயினச்சிக்கு-மயில்போன்ற வேடப் பெண்ணின், மேகலை இடை-மேகலை யணிந்த இடையிலும், கொத்து இன் இருதாளின்-பூங்கொத்துக்கள் உடைய இனிய இருதாள்களிலும், வேரி மழையில்-வாசனைதங்கிய மேகம் போன்ற கூந்தலிலும், பச்சை வேயில்-பசிய மூங்கில் போன் தோள்களிலும், அருண கற்றை வேல்களில்-சிவந்த ஒளித்திரளைக் கொண்ட வேல் போன்ற கண்களிலும், அகப்பட்ட-சிக்கிக் கொண்ட, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! பாரவித-பாரங்கொண்டதும், முத்தம்-முத்துமாலை யணிந்து, படீர-சந்தனம் |