பக்கம் எண் :


30 திருப்புகழ் விரிவுரை

 

பராபர:-

பரம்-மேலானது.பராபரம்-மேலான பொருள் அனைத்துக்கும் மேலான பொருள்.

வராம்ருத:-

அம்ருதம்-அழிவில்லாதது.அடியார்க்கு கேட்ட வரங்களையருள வல்ல அழியாத பொருள் இறை.

சிராதிக:-

சிரம் -தலைமையானது, அதிகம் - மேம்பட்டது. மேலான முதற்பொருள்.

நிராச:-

ஆசையில்லாதது நிராசை. இறைவன் ஒன்றிலும் விருப்பில்லாதவன்.

சிவராஜதவராஜர்கள்பராவிய:-

சிவத்தடன் ஒன்றிய தவமன்னர்கள் துதி செய்கின்ற பொருள்.

நிராயுதபுராரி:-

ஆயுதம் இன்றி சிரித்துப் புரங்களை எரித்தவர் சிவமூர்த்தி.

அச்சுதன்:-

அச்சுதன் - அழிவில்லாதவன். திருமால்

வேதா:-

வேதங்களில்வல்ல பிரமன்.

சொரூபமிவர்:-

விண் மண் சராசரம்ஆகிய எல்லாவற்றிலும் கலந்தவர் இறைவன். இவர் தல்-கலத்தல்.

“கரியானை நான்முகனைக்கனலைக் காற்றைக் கனைகடலைக்
   குலவரையைக்கலந்து நின்ற பெரியானை”        - அப்பர்

எல்லாவற்றிலும்இறைவன் கலந்து நிற்பினும் உலகமாயை அவரைப் பற்றாது.

கடலில் பிறந்து, உவர்நீரைப் பருகி, உவர்நீரிலே வாழுகின்ற கடல்மீனுக்கு உவர் பற்றாதததுபோல், இறைவன் எங்கும்கலந்து நிற்பினும் உலகமாயை அவரைச் சேராது என்று அறிக.

ஆதியைக்குறியாமே:-

ஆதிப்பொருளாகிய இறைவனைத் தியானிதது அசைவற்றிருக்க வேண்டும். இது உய்யும் நெறி.

துரால்புகழ்:-

துரால்-செத்தை, செத்தைபோன்ற பயனற்ற புகழைப் பெற்று பலர் வாடுகின்றார்கள்.