நாதம்-ஒலி. ஒலி, ஒலி ஒளியெல்லாம் இறைவன்தான். “ஓசை ஒளியெலாம் ஆனாய் நீயே” - அப்பர் நாரியிரு வோரைப் புணர்வோனே:- வள்ளியம்மை - மண்ணுலக மடந்தை. தெய்வாயனை-விண்ணுலக மடந்தை. வள்ளியைக் கொண்டு இகலோக வாழ்வும், தெய்வயானையைக் கொண்டு பரலோக வாழ்வும் முருகப் பெருமான் வழங்குவார். சோதி சிவஞானக் குமரேசா:- ஆணவ இருளையகற்றும் ஜோதி வடிவானவர் முருகர். சிவஞானத்தை வழங்குபவர். தோமில் கதிர்காமப் பெருமாளே:- தோம்-குற்றம். குற்றமே இல்லாத புனிதமான திருத்தலம் கதிர்காமம். வணங்குபவர்களின் குற்றத்தைக் களைய வல்லது. கருத்துரை கதிர் காமக் கடவுளே! மாதர்வசமாவோரும், இறைவழிபாடு செய்யாதாரும் நரகில் புகுவார்கள். முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி முனியு மார வார முற்ற கடலாலே முடிவி லாத தோர்வடக்கி லெரியு மால மார்பி டத்து முழுகி யேறி மேலெ நிக்கு நிலவாலே வெதிரி லாயர்வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும் வினைவி டாத தாய ருக்கு மழியாதே விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற விகட மாதை நீயணைக்க வரவேணும் கதிர காம மாந கர்க்கு ளெதிரி ஙாத வேல்த ரித்த கடவு ளேக லாப சித்ர மயில்வீரா கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி ககன மேவு வாளொருத்தி மணவாளா அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க அரிய ஞான வாச சத்தை யருள்வோனே |