பக்கம் எண் :


310 திருப்புகழ் விரிவுரை

 

வினைவி டாத தாயருக்கு    மழியாதே
விகட மாதை நீயணைக்க    வரவேணும்
கடவு ளேக லாப சித்ர    மயில்வீரா
ககன மேவு வாளொருத்தி   மணவாளா
அரிய ஞான வாச கத்தை   யருள்வோனே
அமரர் லோகம் வாழ வைத்த   பெருமாளே

கருத்துரை

கதிர்காமக் கடவுளே! உன்னை நினைந்து வருந்தும் இப்பெண்ணைத் தழுவியருள நீ வரவேண்டும்.

196

வருபவர்க ளோலை கொண்டு
நமனுடைய தூத ரென்று தொடர்போது
மடிபிடிய தாக நின்று
மயலதுபொ லாத வம்பன்
விரகுடைய னாகு மென்று
வசைகளுட னேதொடர்ந்து  அடைவார்கள்
கருவியத னாலெ றிந்து
சதைகள்தன யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்து விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று
விடுமெனும வேளை கண்டு
கடுகிவர வேணு மென்றன் முனமேதான்
பரகிரியு லாவு செந்தி
மலையினுட னேயி டும்பன்
பழநிதனி லேயி ருந்த குமரேசா
பதிகள்பல வாயிரங்கள்
மலைகள்வெகு கோடி நின்ற
பதமடியர் காண வந்த கதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை
விலுவமொடு தூர்வை கொன்றை
யணிவர்சடை யாளர் தந்த முருகோனே
அரகர சிவாய சம்பு